புதன், 4 மே, 2016

புதிய உடன்படிக்கை - 2 -நாடகம்

புதிய உடன்படிக்கை 

காட்சி – 2


இடம்மாளிகை
பாத்திரங்கள்:  ஜான்சன்,  ஜான்சனின் தந்தை ஆரோக்கியசாமி, ஜாக்லின் சித்ரா,  ஜாக்லின் சித்ராவின் தந்தை ஞானசௌந்தர், நண்பன் கனகராஜ்.

(மணமக்கள் இருவரும் சேபாவில் அமர்ந்திருக்கிறார்கள்.  மணமனின் அப்பா ஆரோக்கியசாமி அருகில் வருகிறார்.)

ஆரோக்கியசாமி: ஜான்சன்... ஜான்சன்... மாமா ஊருக்கு பேறேன்னு சொல்றாரு...
(மணமகளின் தந்தை ஞானசௌந்தர் வீட்டிற்குள்ளே இருந்து வருகிறார்)

ஜான்சன்: ஏங்க மாமா... இருந்திட்டு போலாமே...

ஆரோக்கியசாமி: என்னடா... ஒரு மரியாத இல்லாம... உக்காந்திட்டு... எழுந்திரிடா...

ஞானசௌந்தர்:  இருக்கட்டும்... இருக்ட்டும்... காலையில இருந்து கால்கடுக்க நின்னு நின்னு... பாவம்... மாப்பிள்ள நீங்க உக்காருங்க... அங்கே தலைக்கு மேல வேலையிருக்கு... அம்மா... ஜாக்லின்... நா வரட்டுமாம்மா...

ஜாக்லின்: அப்பா... (பாசத்துடன் அழுகிறாள்)

ஞானசௌந்தர்: அழாதேம்மா... (கண்ணீரைத் துடைத்து விடுறார்).  என்ன நா தூரத்திலையா இருக்கேன்... பத்து மையிலுக்கும் பக்கம்தான்... அப்புறமெதுக்கும்மா... அழறாய்... கண்ணை துடைச்சுக்க...

ஆரோக்கியசாமி: ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு... சந்தோசமா வழி அணுப்பி வைங்க... (இருவரும் ஞானசௌந்தர் காலில் விழுகிறார்கள்)

ஞானசௌந்தர்: நல்லா... தீர்க்காயுசா... நல்லா இருக்கணும்... நீங்க நல்லா இருப்பீங்க... எழுந்திருங்க... (ஆசிர்வதித்து அவர்களை எழுந்திருக்கச் செய்கிறார்.)  ம்...ம்... இதெல்லாம் பாக்க ஜாக்லினோட அம்மா உயிரோட இல்ல...

ஆரோக்கியசாமி: இவனோட அம்மாவுக்கும்  கல்யாணத்த கண்ணுல பாக்கிற பாக்கியம்  கொடுத்து வக்கல... என்ன பண்றது நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்... பழையதெல்லாம் நெனச்சு என்ன பண்றது...?

ஞானசௌந்தர்: சரிங்க... எ...பொண்ணு ஜாக்லின் சின்னப் பொண்ணு... அவனுக்கு ஒன்னும் தெரியாது... வயசாயிடுச்சு... வளர்ந்திட்டா... டீச்சர் வேலையும் பாக்கிறா... ஆனாலும் பச்சப்புள்ளங்க... பொண்ணக் கண்ணு கலங்காம பாத்துக்கங்க... (சரியென மாப்பிள்ளை தலையசைக்கிறார்)

ஆரோக்கியசாமி: நா இருக்கேன்ல்ல... இனி ஒங்க பொண்ணு இல்ல... எ பொண்ணு... போதுமா...?

ஞானசௌந்தர்: அது போதும்... அது போதும்... நான் வர்றேன்... எல்லாத்துக்கும்... போயிட்டு வர்றேன்...

(கையெடுத்து கும்பிட்டபடி வெளியே செல்கிறார்.  சிறிது நேரத்தில் நண்பன் கனகராஜ் உள்ளே நுழைகிறான்)

ஜான்சன்:  வாடா கனகராஜ்...

கனகராஜ்: வர்றேம்ப்பா... ஜான்சன் கொஞ்சம் இப்படி வா...(ஜாக்லினைப் பார்த்து) சாரி... தப்பா நெனச்சுக்காதிங்க... (தனியாக ஜான்சனை அழைத்து) என்னடா... பொழுதும் சாய்ஞ்சிடுச்சு... பிரண்ட்ஸ் எல்லாம் எப்ப... பார்ட்டி... பாட்டீன்னு பறக்கிறாங்க...

ஜான்சன்: ஒங்க அவசரம் புரியுது... எல்லாரும் செவனா ஹோட்டலுக்கு போங்க... நா அங்கே வந்திடுறேன்... ஓ...கே...

கனகராஜ்: தேங்யுப்பா... தேங்யு... (ஜாக்லினை பார்த்து) சாரி பார் த டிஸ்டப்மெண்ட்ஸ்... அப்போ போயிட்டு வர்றேங்க...
(வெளியில் கனகராஜ் செல்கிறான்)

ஜான்சன்: (ஜாக்லின் அருகில் வந்து) கொஞ்சம் எனக்கு அவசரமா வெளியே வேலை இருக்கு... நா போயிட்டு வர்றேன்...

ஆரோக்கியசாமி:இன்னக்கி என்னடா வேலை...?

ஜான்சன்: போனவுடனே வந்திடுறேன்ப்பா...

ஆரோக்கியசாமி: எப்பவுமாதரி கண்ட கண்ட பயலுகளோட சுத்திட்டு... கால நேரம் பாக்காம வர்றத விட்டிடுடா... டே...! இனி நீ ஒன்டிக்கட்ட இல்ல... ஆமா... அதை ஞாபகத்தில வச்சுக்க... என்ன தெரியுதா...?

ஜான்சன்: சரிப்பா... கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்... 

(வெளியே செல்கிறான்)


                        


                                                          -தொடரும்...

-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.                                                                                                                                                                                                      

10 கருத்துகள்:

  1. ஜான்சனோடு நானும் ஹோட்டலுக்கு செல்கிறேன் (காரணத்தோடுதான்)
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      முதலில் வந்து ஓட்டுப் போட்டுவிட்டு காரணத்தோடு செல்லும் தங்களை நண்பர்கள் குழு இனிதே வரவேற்கிறது.

      நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாரே!

      தாங்கள் தொடர்வதற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புள்ள முனைவர் அய்யா,

      தாங்கள் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. கால்கட்டு போட்டாச்சு ,அடுத்து ?

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஜீ,

    கால் போன போக்கிலே மனம் போகலாமா...?

    பதிலளிநீக்கு
  6. கல்யாணப் பார்ட்டியா அடப்ப்பாவமே...தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் இந்த கௌரவப்ரசாதம் இதுமட்டுமா எனக்குப் போதும்...?

      தொடர்வதற்கு மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...