வெள்ளி, 20 மார்ச், 2015

தடம்மாற்றிய பண்டிகை! - (பரிசு பெற்ற சிறுகதை)

பரிசு பெற்ற சிறுகதை

              திருவாளர்கள் ரூபன் &  யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில்    இடம் பெற்ற 

 எனது சிறுகதை...


தடம்மாற்றிய பண்டிகை!

(மணவை ஜேம்ஸ்)

     ல்லிக்கட்டு நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

     முத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது.  ‘மாடுபிடி வீரன்எனப்பெயரெடுத்தவன்.  இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு  வயதில் கரம் பிடித்தாள்.

     கல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.

வியாழன், 12 மார்ச், 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3



சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3



சந்திப் பிழை போன்ற சந்திப் பிழை நாங்கள்!

 திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘கருப்பு மலர்கள்கவிதை நூலில் குறிப்பிடுகின்றார்.

       ஒற்றுமிகுத்து ஒலிக்கவேண்டிய இடத்தில் ஒற்று மிகுத்தும், ஒற்றுமிகுத்துக் கூறாமல் இயல்பாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இயல்பாக ஒலித்தும், எழுதியும் வந்தால்தான் தமிழ் இனிமையுடைய மொழியாக இருக்கும்.  இல்லையேல், ஓசை இனிமை குன்றுவதுடன் பொருட்பிழையும் நிகழும்.   
   
     ஒற்றுச் சேர்த்தும் சேர்க்காமலும் எழுதுவதால் பொருள் மாறுபடும் சில இடங்களைப் பார்ப்போம்.
                                                                     
       தயிர் கடை        - தயிரைக் கடைவாயாக
       தயிர்க் கடை       - தயிரை விற்கும் கடை                                                                                                    
       கை குட்ட        - குட்டையான கை
       கைக்குட்டை      - கைக்கு சிறிய துண்டு                                     
       வழிபடுதல்             - வணங்குதல்
       வழிப்படுதல்            - பின்பற்றுதல்  

வல்லினம் மிகா இடங்கள்:

தொகை என்றால் தொக்கி (மறைந்து) வருவது

 என்பதுதான் தெரிந்ததாயிற்றே !




வினைத்தொகையில் எக்காரணம் கொண்டும் வல்லினம் மிகாது.
     நிறுத்துங்க...நிறுத்துங்க... நீங்கபாட்டுக்குச் சொல்லிக்கிட்டுப் போனா எப்படி?  வினைத்தொகைன்னா மொதல்ல என்னான்னு சொல்லனுமுல்ல...?

சனி, 7 மார்ச், 2015

கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!





கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!




          கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் பிறந்த குழந்தை

 

நாளிதழில் படித்ததும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய  செய்தி இதுதான்.

சேலத்தில் இருந்து


சுற்றுலா வந்த 21 வயது கல்லூரி மாணவிக்கு ‘திடீர்’ பிரசவம்


கழிப்பறையில் குழந்தை பிறந்தது


   சேலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இருந்து 300 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 5 பஸ்களில் கடந்த 22-ந்தேதி கேரளாவுக்குச் சுற்றுலா சென்றனர்.  அவர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு கோவை வழியாக சேலம் செல்வதற்காகப் பஸ்களில் வந்து கொண்டிருந்தனர்.  நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் வந்த பஸ் தமிழக – கேரள எல்லையில் உள்ள கந்தேகவுண்டன் சாவடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

     அப்போது அந்த பஸ்சில் வந்த 21 வயது மாணவி ஒருவருக்குத் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது.  இதனால் அவர் வேதனையில் அலறித்துடித்தார்.  அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே பஸ் வந்து கொண்டிருந்த்தால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஆனால் அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமானதால் சக மாணவிகளும், ஆசிரியைகளும் செய்வதறியாது திகைத்தனர்.

     இதையடுத்து பஸ்சை க.க.சாவடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தினார்கள்.  அங்குள்ள கழிவறைக்கு செல்லுமாறு அந்த மாணவியிடம் ஆசிரியைகள் கூறினார்கள்.  உடனே அந்த மாணவி கழிவறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.  சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டது.  இதைக் கேட்டதும் சக மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     பின்னர் ஆசிரியைகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் உதவியுடன், கழிவறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.  கழிவறைக்குள் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.  அவர் அருகில் ஒரு பெண் குழந்தையும் கிடந்தது.  இதைப் பாத்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சில் அந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டனர்.  ஆனால் அந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது தெரிய வந்தது.  மாணவி மயங்கிய நிலையில் இருந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிதோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.


     இந்த சம்பவத்தால் சுற்றுலா வந்த மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.  சுற்றுலா வந்த இடத்தில் பிரசவமா? என்று அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

 

     மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியாமல் அவரை எப்படி சுற்றுலாவுக்கு அழைத்து வந்தீர்கள் என்று சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அதற்கு அவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது.  அப்படி தெரிந்திருந்தால் அவரை சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருக்க மாட்டோம்.  திருமணமாகாத, அதுவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்திருந்தால் நாங்கள் அந்த மாணவியின் பெற்றோரிடமே தெவித்திருப்போமே என்று கூறினார்கள்.  இது தொடர்பாகப் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

     இதைத்தொடர்ந்து விசாரணை பேரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.  போலீசார் இது பற்றி அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.  இதற்கிடையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் நேற்று மதியம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அந்த மாணவி யாரையாவது காதலித்தாரா?  கர்ப்பத்துக்கு யார் காரணம்?  என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செவ்வாய், 3 மார்ச், 2015

பெயரிலிகள்...! /(வயது வந்தவர்கள்!)



பெயரிலிகள்...! /(வயது வந்தவர்கள்!)





நாங்கள்-
தேர்தல் சந்தையில்...
வாக்கு வியாபாரியாகிப் போன
வயது வந்தவர்கள்!



அரசியல் முதலாளிகளே...!
மாடுகளை மாதிரி
எங்களையும்...                 
பேரம் பேசி
வாங்கிக் கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...