பார்த்தேன் ரசித்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்தேன் ரசித்தேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மே, 2020

அண்ணாவிற்குத் தம்பியின் தாலாட்டுப் பாடல்


பேரறிஞர் அண்ணாவிற்குத் திருச்சி சிவாவின்  தாலாட்டு





பட்டு மணல் தொட்டிலிலே
பூமணக்கும்  தென்றலிலே
கொட்டும் பனிக்குளிரினிலே
கடல்வெளிக்  கரையினிலே
உறங்குகின்றாய் மன்னா – நாங்கள்
கலங்குகின்றோம் அண்ணா
அருமை அண்ணா

உன்னை இங்குப் பிரிந்ததனால்
பூவுலகம் அழுகின்றது
தன்விழியை இழந்ததனால்
தடுமாறி விழுகின்றது ….                                          (2)
ஏதுமற்ற சூனியத்தில் – எங்கள்
மனம் தவிக்கின்றது
சூழுகின்ற துயர்க்கடலில்
மூழ்கி மூழ்கி துடிக்கின்றது ….                                     (2)
                           ஆரிரோ… ஆரிராரோ ….



கண்ணுறங்கு கலைமகனே
ஆவிவிட்டுப் போனபின்பும்
வாழுகின்ற தலைமகனே
                             ஆரிரோ… ஆரிராரோ ….
நாடுபட்ட நோய் தீர்க்க
நாளெல்லாம் பாடுபட்டாய்
பாடுபட்ட காரணத்தால்
உன் உடம்பில் மாறுபட்டாய்                                       (2)
மாறுபட்ட பொன்னுடம்பை
மீட்டுத்தர முடியவில்லை
ஆனமட்டும் பாடுபட்டும்
அந்த வித்தை பலிக்கவில்லை                                     (2)
                               ஆரிரோ… ஆரிராரோ ….

கண்ணுறங்கு கலைமகனே
ஆவிவிட்டு போன பின்னும் 
வாழுகின்ற தலைமகனே
                                ஆரிரோ… ஆரிராரோ ….
தூங்கிய தென்னவரை
தருணத்தில் விழிக்க வைத்தாய்
தாயைப் போல் அரவணைத்து
தன்மான உணர்வளித்தாய்                                        (2)

விட்டு எம்மைப் பிரிந்து செல்லும்
எண்ணத்தை யார் கொடுத்தார்
சிட்டு போல் சிறகடித்து
சொல்லாமல் ஏன் பறந்தாய்                                       (2)
                               ஆரிரோ… ஆரிராரோ ….

கண்ணுறங்கு தலைமகனே
ஆவி விட்டுப் போன பின்னும்
வாழுகின்ற தலைமகனே
                               ஆரிரோ… ஆரிராரோ ….             (2)


            *************************************


கையறுநிலையில் பேரறிஞர் அண்ணாவின்                
நினைவைப் போற்றும்  
கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்களின் பாடலை... 
தாஜ் நூர் அவர்களின் மெல்லிய இசையில் 


திருச்சி சிவா அவர்கள் உருகிப் பாடித் தாலாட்டும் 
அருமையான பாடல்.    



பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க...



 -மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

                                   

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வெளிவராத படத்தில் ஒரு பாடல்

ஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும்!

 1970 இல் வெளிவந்த சிறுகதை




அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த, கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற காரியத்தில் முனைந்தாள்.

"
என்ன காலிலே?"  என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

"
போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின் தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக் கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை  யாராவது வாங்குவாங்களாங்கோ?" 

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பார்வையில்லாப் பாடகி!


 பார்வையில்லாப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி!

வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு’ என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
   


1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீதரன், விமலா இணையருக்கு ஒரே மகளாய்ப் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இவரது பெற்றோருக்குத் தங்கள் மகள் தீர்க்கவியலாப் பார்வைக் குறைபாடு பெற்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. மிகச்சிறுவயதிலேயே ஒலிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே இராகம் தாளம் பிறழாமல் பாடும் விஜயலட்சுமியின் திறனைக் கண்ட அவர் தந்தை எம். எஸ். அம்மா, ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம்  ஆகியோரின் செவ்வியல் ஒலிநாடாக்களைக் கேட்கும்படிச் செய்தார்.
சிறுவயதில் கிடைத்தவொரு வீணையில் பாட்டு வாசிக்கப் படித்தார் விஜயலட்சுமி. பின்னர் இவரது தந்தை ஒற்றைக் கம்பி வீணை ஒன்றை அமைத்தளித்தார். இதன் காரணமாக இவருக்கு ஒற்றக்கம்பி வீணை காயத்ரி என்ற பெயர் கிட்டியது.  குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே இந்த வீணைக்குக் காயத்ரிவீணை என்னும் பெயரை அளித்தவர்.



விஜயலட்சுமிக்கு பார்வை பறிபோனாலும் 'குயில் ' போன்ற குரலுடன்  எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.

வியாழன், 28 ஜனவரி, 2016

வாலியின் வசியம் செய்யும் வாலிபப் பாடல்கள்!


குட்டீஸ் நடனம்


என் ஆசை மச்சான் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தத்   திரைப்படத்தில் 



‘வாலிபக் கவிஞர்’ வாலியின் வரிகளுக்குத் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசையில் பாடியவர் ‘சின்னக்குயில்’ சித்ரா;  நடித்தவர்கள் விஜய்காந்த் & ரேவதி.




காணொளி காண ‘கிளிக்’ செய்க...



ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீரப்பாண்டி தேருப் போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்...

***********************************************************************************************************



‘மெளனம் சம்மதம்‘ 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் வாலியின் வரிகளுக்கு இளையராஜாவின் இசையில்  ஜேசுதாஸ் & சித்ராவும் பாடிய ரம்மியமான பாடல்.  நடித்தவர்கள் மம்முட்டி மற்றும் அமலா

ஆண் : கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா
          நீதானே வான் நிலா
          என்னோடு வா நிலா
          தேயாத வெண்ணிலா
          உன் காதல் கண்ணிலா
          ஆகாயம் மண்ணிலா

          கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா


ஆண் : தென்பாண்டி கூடலா
          தேவார பாடலா
          தீராத ஊடலா
          தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு காதலா
           எந்நாளும் கூடலா
           பேரின்பம் மெய்யிலா
           நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே ஆவலா
          வா வா நிலா...

பெண் : கல்யாண தேன் நிலா
           காய்ச்சாத பால் நிலா

ஆண் : நீதானே வான் நிலா
          என்னோடு வா நிலா


பெண் : உன் தேகம் தேக்கிலா
          தேன் உந்தன் வாக்கிலா
          உன் பார்வை தூண்டிலா
          நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
          நீ பேசும் பேச்சிலா
          என் ஜீவன் என்னிலா
          உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பலா
           உன் சொல்லிலா..ஆ.ஆ...

ஆண் : கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா
          நீதானே வான் நிலா
          என்னோடு வா நிலா

பெண் : தேயாத வெண்ணிலா
           உன் காதல் கண்ணிலா
           ஆகாயம் மண்ணிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா



காணொளி காண ‘கிளிக்’ செய்க...





-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மரங்களைப் பாடுவேன்...! - கவிப்பேரரசு வைரமுத்து.

  மரங்களைப் பாடுவேன்







-கவிப்பேரரசு வைரமுத்து



வாரும் வள்ளுவரே

மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?

மரம் என்றீர்

மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?



வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?


மரம் என்றீர்

மரம் என்றால் அத்தனை இழிவா?


பக்கத்தில் யாரது
பாரதிதானே

பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?

நெட்டை மரங்கள் என்றீர்

மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?


மரம் 
சிருஷ்டியில் ஒரு சித்திரம்

பூமியின் ஆச்சரியக்குறி

நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்



விண்மீனுக்குத் தூண்டில்போடும்
கிளைகள்


சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்

உயிர் ஒழுகும்
மலர்கள்

மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு

மனிதன் தோன்றுமுன் 
மரம் தோன்றிற்று

மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்



மனித ஆயுள்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்


மரம் அப்படியா..?

வளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்


மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி

மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்




வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?



மரத்தை அறுத்தால்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்


மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்


மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்


நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக



மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?




மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?



மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?


பறவைக்கும் விலங்குக்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன்
மரம்

மரத்தின் முதல் எதிரி
மனிதன்

ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்


உண்ணக்கனி - ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்


பிறந்தோம்


தொட்டில்
மரத்தின் உபயம்


நடந்தோம்

நடைவண்டி
மரத்தின் உபயம்


எழுதினோம் 

பென்சில் பலகை
மரத்தின் உபயம் 

மணந்தோம்

மாலை சந்தனம்
மரத்தின் உபயம்

புணர்ந்தோம்

கட்டில் என்பது
மரத்தின் உபயம்

துயின்றோம்

தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்

நடந்தோம்

பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்

இறந்தோம்

சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
எரிந்தோம்

சுடலை விறகு
மரத்தின் உபயம்

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்


மனிதா

மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா

ஒவ்வொரு மரமும்
போதிமரம்.



நன்றி: வைரமுத்து கவிதைகள்
                                                                         


                         காணொளி  காண ‘கிளிக்’ செய்க                            



                                                    செல்வி.  கயலின்  குரலில்


                                                                                                                                                   
                                             
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

                                     















Related Posts Plugin for WordPress, Blogger...