வெள்ளி, 20 மே, 2016

புதிய உடன்படிக்கை - 6 நாடகம்



புதிய உடன்படிக்கை 


காட்சி – 6
இடம்:  மாளிகை
பாத்திரங்கள்: ஜாக்லின் சித்ரா, ஆரோக்கியசாமி, ஜான்சன்.

(ஆரோக்கியசாமி சோபாவில் அமர்ந்திருக்க நின்று கொண்டு இருக்கிறாள் ஜாக்லின்)

ஆரோக்கியசாமி:  ஏம்மா... நின்னுக்கிட்டே இருக்கா... உட்காருமா...

ஜாக்லின்: பரவாயில்லைங்க மாமா...

ஆரோக்கியசாமி:  பள்ளிக்கூடத்துக்கு எத்தனை நாளும்மா லீவு போட்டிருக்கா...

ஜாக்லின்: ஒரு வாரம் லீவு போட்டிருக்கேன் மாமா...

ஆரோக்கியசாமி:  ஓ...கோ... ஆமாம்மா... நேத்தைக்கு எத்தன மணிக்கு வீட்டுக்கு...  ஜான்சன் வந்தான்...?

ஜாக்லின்: அவரு வந்தப்ப மணியப் பாக்கலைங்க மாமா...

ஆரோக்கியசாமி: நான் படுக்கிறப்பவே மணி பன்னெண்டுக்கு மேலே ஆயிடுச்சு... நான் படுத்து எவ்வளவு நேரம் கழிச்சு வந்தான்...?

ஜாக்லின்:  கொஞ்ச நேரத்தில வந்திட்டாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: துரைக்கு அவ்வளவு நேரம் என்ன வேலையாம்...? 
அயோக்கியப் பயல்... முன்னாடிதான் நேரங்காலம் தெரியாம சுத்துவான்... கண்ட நேரத்துக்கு வந்து படுப்பான்... பொண்டாட்டி கட்டினத்துக்கு அப்புறம்கூட புத்தி வல்லையே... கொஞ்சமாவது நெஞ்சுல பயமிருந்தா... இப்படி இருப்பானா...? காலையில போனவன்... பொழுது சாஞ்சு எவ்வளவு நேரமாகுது... போனவன இன்னும் காணோமே...(கோபமாக) வரட்டும்...

ஜாக்லின்: மாமா... அதோ அவரு வர்றாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: வர்றானா...! வரட்டும்... வரட்டும்...

(மெதுவாக உள்ளே நுழைகிறான் ஜான்சன்)

ஆரோக்கியசாமி: டே... நில்லுடா... எங்கே போயிட்டு வர்றாய்...?


ஜான்சன்: ..............................................................................           (ஜாக்லினை முறைத்து பார்க்கிறான்)

ஆரோக்கியசாமி: அங்கே என்னடா மொறப்பு வேண்டிக் கிடக்கிது... எங்கே போயிட்டு வர்றான்னு கேட்டேன்... பதிலைச் சொல்லுடா...

ஜான்சன்: (தயங்கி தயங்கி) இல்ல... இல்ல... விவசாயத்துக்காக நம்மளுக்கின்னு ஒரு... ஒரு... டிராக்டர் வாங்கலாமுன்னு பக்கத்து ஊருக்குப் போயி பாத்திட்டு வர்றேன்...

ஆரோக்கியசாமி: அட...!  இதென்னடா ஆச்சர்யமா இருக்கு... தோட்டத்துப் பக்கம் போடான்னக்கூடப் போகமாட்டாய்... உண்மையில இனி நீ பொழச்சுக்குவாடா... என்னா... வண்டியைப் பாத்தியா...?

ஜான்சன்: வண்டியப் பாத்தேன்... ஒண்ணும் ஒத்துவர்றமாதிரி தெரியலைப்பா...

ஆரோக்கியசாமி: ஏண்டா...?

ஜான்சன்: நம்ம இழுவைக்கு ஒத்து வர்ற மாதிரி தெரியலை...

ஆரோக்கியசாமி: ஒத்துவல்லைன்னா என்னா...? ஒத்துவர்ற வண்டியப் பார்க்க வேண்டியதுதானே... உலகத்தில அந்த ஒரு வண்டிதான் ஓவியமா...என்ன...?

ஜான்சன்: வண்டி பாக்க நல்லா இருக்கு...  பார்ப்போம்...

ஆரோக்கியசாமி: சரி...சரி... ஒ மனசுக்கு புடிச்சிருந்தா பாரு...

ஜான்சன்: பாக்கிறேம்ப்பா... பாக்கிறேன்...

ஆரோக்கியசாமி: என்னம்மா நாங்களா பேசிக்கிட்டு இருக்கோம்... நீ பேசாமா இருக்கே...? டே...! மருமகள் கோவிச்சிருக்கிறாப்புள நடந்திக்காதடா...

ஜான்சன்: (பயந்தவாறு) என்னப்பா...?

ஆரோக்கியசாமி: இல்ல... எங்க போனாலும் நா இந்த எடத்துக்குப் போறேன்... வர்றதுக்கு இவ்வளவு நேரமாகுமுன்னு சொல்லிட்டு போகனும்டா...

ஜான்சன்: அதானே...! நா கூட பயந்தே போயிட்டேன்...!

ஆரோக்கியசாமி: சரிம்மா... நல்ல காரியத்துக்குத்தானே போயிட்டு வந்திருக்கான்... மகாலட்சுமி மாதிரி நீ வந்திட்டா... இனி எனக்கென்ன கவலை...

ஜான்சன்: ஆமா மாமா... ஒங்களுக்கு என்ன கவலை...

ஆரோக்கியசாமி: ஆமாம்மா... சரி... அவனுக்குப் சாப்பாடு போடும்மா...

ஜாக்லின்: வாங்க சாப்பிடலாம்...

ஜான்சன்: வெளியில நா சாப்பிட்டேன்...

ஆரோக்கியசாமி: டே...!  என்னடா... நீ எப்ப வருவான்னு மருமகள் ஒனக்காக... காத்துக்கிட்ட இருக்கு... நீ என்னடான்னா வெளியில சாப்பிட்டேங்கிறியே... ஒனக்கே இது நல்லா இருக்கா...?

ஜான்சன்: இல்லப்பா... பிரண்ஸ்ஸோட சாப்பிட்டேன்... எனக்கு ரொம்ப டயடா இருக்கு... பெட் ரூமில்ல போயி படுக்கிறேன்...

ஆரோக்கியசாமி: டே...! மருமகள் இன்னும் சாப்பிடலை... தெரியுமில்ல...?

ஜான்சன்:  எனக்கெப்டிப்பா தெரியும்... சரி... சாப்புட்டுட்டு  வரட்டும்... நா போயி படுக்கிறேன்...
                                                                                                                    

               





                                                        -தொடரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


























8 கருத்துகள்:

  1. இந்த பதிவில் கம்மியான ட்விஸ்ட் ... தொடர்கிறேன் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாரே!

      தாங்கள் தொடர்வதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. தொடர்கிறேன் மணவையாரே.... ஜாக்லின் வாழ்வில் சந்தோஷம் குறைந்து கொண்டே வருகின்றதே..
    த.ம. 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஜான்சனின் சலிப்பு ,எதில் போய் முடியுமோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      எது வரை போகுமோ... அது வரை போகலாம்...!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...