ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து!

     எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவு !


தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா


இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா




கவிஞர் மருதகாசியின் இந்தப்பாடல் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

          

நாம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்கிறோம்.  எதையுமே
 முதன்மையாகக் கருதுவதில்லை. எதையாவது இழந்த பிறகுதான் அதன்
 அருமையை உணர்கிறோம். 

அன்றாடம் விபத்துகள் பற்றிய செய்திகள் வராமல் இருப்பதில்லை. வாகனங்கள் மற்றும் மக்கள்தொகை பெருக்கமும் முக்கியக் காரணம் என்றாலும்கூட; அதற்கேற்பச் சாலைகள் இல்லாதததும், சாலை விதிமுறைகளைக் கடைபிடிக்காதததும்தான் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கியக் காரணம். 

------------------------------------------------------------------------

வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விபத்து: கால்களை இழந்து தவிக்கும் பரிதாபம்

                                                       



பட்டம் வாங்கிய கையோடு தனது ஏழைப் பெற்றோரின் கண்ணில் காட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் சென்ற வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையை விபத்து ஒன்று புரட்டிப் போட்டுவிட்டது.
             

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

அன்னை தெரசாவை காறித் துப்பியவனைத் தெரியுமா?



அன்னை தெரசா !




அன்னை தெரசா  அகிலமே  போற்றிடுமே!

அன்பை   விதைத்து   அனாதைகளைக்   காத்து

தொழுநோய்  போக்கிடும்  தொண்டினைச்  செய்து

தொழுதிடவே  வைத்திட்ட  தாய்!

                                                                                   -மணவை.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. 


                                                                                                                         


திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும்...!



நீங்க கிளி ஜோஸ்யம்  பார்த்ததுன்டா...?





                     கிளி ஜோஸ்யம் பார்த்து நம்முடைய வாழ்க்கையில் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போறவை பற்றி எல்லாம் சொல்லுகின்ற ஜோஸ்யக்காரரைப் பார்த்து  பள்ளிப் பருவத்தில் வியந்து போயிருக்கிறேன்.
என் வியப்பிற்குக்  காரணம்  என்னவென்றால்...  அடைத்து வைக்கப் பட்டிருக்கும் கிளி கூண்டைத் திறந்தவுடன்  வெளியே  வந்து அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சீட்டை எடுப்பதைக்கண்டுதான்.



                      மணப்பாறைக்கு அருகிலுள்ள ஆண்டவன் கோயில் போல இருக்கும் கோவிலின் திருவிழாக் காலங்களில், ‘வள்ளி திருமணம்’ போல நாடகம் நடக்கக்கூடிய இரவு நேரங்களில்,  மக்கள் கூடும் சந்தைகளில்,  சாலை ஓரங்களில் , கிராமங்களில் கிளிக்கூண்டை மிதிவண்டிகளில் வைத்தோ அல்லது கைகளில் தூக்கிக்கொண்டோ  ஜோஸ்யம் பார்ப்பவர்கள் செல்வது  வாடிக்கை.  ஜோஸ்யம் பார்ப்பவர்களை  வேடிக்கை பார்ப்பது  எனது வாடிக்கை.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!





தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!



வலைப்பூவில் அநேகர் எழுதுகிறார்கள். பலருக்கு வலைப்பூவின் பதிவுகளில் இடம்பெறும் சந்திப் பிழைகளோ எழுத்துப் பிழைகளோ உறுத்துவதே இல்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லையே? அப்படி இருக்க முடியாதவர்களில் ஒருவர் நீச்சல்காரன்.

இவரிடம் ‘வலைப்பூவில் சந்திப் பிழையுடன் எழுதுகிறீர்கள்’ என்று ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விமர்சனத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை ‘நீச்சல்கார’னால். சந்திப் பிழையைச் சரிசெய்யும் மென்பொருள் ஒன்றைக் கண்டடையும் முயற்சியை மேற்கொண்டார். அப்படி முதலில் இவர் உருவாக்கியதுதான் ‘நாவி’ என்னும் தமிழ் சந்திப் பிழை திருத்தி. தனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன்படும்படி ஆன்லைனில் இயங்கும் ‘நாவி’யை உருவாக்கிய ‘நீச்சல்கார’னின் நிஜப் பெயர் ராஜாராமன்.

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல் 

சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்


புதன், 19 ஆகஸ்ட், 2015

ஊமையான உண்மைகள்!



ஊமையான உண்மைகள்!  


                                  
                
        


           உறங்கிக் கொண்டிருந்த ஊரார்களை உசுப்பி எழுப்பியது அந்த கோவிலின் வெண்கல மணியோசை.  இந்த இரவு நேரத்தில் கோவில் மணியை அடித்தது யார்?  மணி எதற்காக அடிக்கப்பட்டது,  நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஊரில் மணியடித்துத் தெரிவிப்பது வழக்கம்தான்  என்றாலும் வழக்கத்திற்கு மாறாக  ஏதோ அவசர அழைப்பாகவே எண்ணத் தோன்றியது.  சிறிது நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ஆண் பெண் பேதமின்றி ஊரார்கள் அனைவரும் கோவில் முன் வந்து கூடிவிட்டனர்.


          அங்கே ஊர் பெரியவர்களில் மணியக்காரர், கோவில்பிள்ளை வந்துவிட்ட பின்னும் ‘பெரியவர்’ என்றழைக்கப்படும்  நாட்டாண்மை மட்டும் வரவில்லை. ‘ கோவில் மணியை அடித்தது யார்?’- என்று தெரிந்துகொள்ள கோவிலுக்குள் கூட்டம் விரைவாக  நுழைந்தது.  கோவிலுக்குள்ளிளிருந்து அழுதுகொண்டே இழுத்துப் போர்த்திய சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தவாறு வெளியே வந்தாள் அனுசூயா.

சனி, 15 ஆகஸ்ட், 2015

மனித நேயத்துடன் மாணவிக்கு உதவி கிடைத்தது எப்படி?

முசிறி மாணவி  நேரில் பார்த்த மனித தெய்வங்கள்! 



முகவரி தவறியது எப்படி?

மாணவி சுவாதி திருச்சியில் உள்ள வேளாண் பல்கலை 
கல்லுாரியில் உள்ள உதவி மையம் மூலமே, 'ஆன் - லைனில்' விண்ணப்பித்துள்ளார். கோவை பல்கலையுடன் அவருக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லை.  இதனால், கலந்தாய்வு எங்கு நடக்கிறது என்ற விவரத்தை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. மேலும், கலந்தாய்வுக்குப் புறப்படும்போது, சுவாதியின் தாய் தங்கப்பொண்ணு, தன் உறவினரிடம் கேட்டு,  கோவையில் தான் கலந்தாய்வு என்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், சுவாதியின் தோழி ஒருவர், 'சென்னையில் தான் அண்ணா அரங்கு உள்ளது; அங்கு தான் கலந்தாய்வு நடக்கிறது' என்று கூறி குழப்பி விட்டதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

                                                                       

சொந்த கிராமத்தில் மாணவி சுவாதி



.
மாணவி சுவாதி திருச்சி மாவட்டம் முசிறி பைபாஸ் ரோடு, உழவர்சந்தை அருகே வசிப்பவர் ராஜேந்திரன் மனைவி தங்கப்பொண்ணு(வயது40). இவர் கணவனால் கைவிடப்பட்டவர். இவர்களுக்குச் சுவாதி, சுஸ்மிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

மறக்க முடியுமா சசிபெருமாளின் மரணத்தை...?





சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி: சொந்த ஊரில் நல்லடக்கம்

காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு இறுதி அஞ்சலி
காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு இறுதி அஞ்சலி
சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் அவரது வீட்டுக்கு முன்பாகவே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மணி மண்டபம் கட்டப்படவுள்ளது.
முன்னதாக, அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் சசிபெருமாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது வீட்டுக்கு முன்பாக சசிபெருமாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சசிபெருமாள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இறுதி அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சசிபெருமாள் உடல் அவர் வீட்டுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார். இன்றோடு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். ஆனாலும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம் என்று விவேக் கூறியுள்ளார்.

சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி: திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

  

சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின் | படம்: ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுத்தது.
சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின் |

சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சேலம் அருகேயுள்ள இமேட்டுக்காட்டில் வைக்கப்பட்டுள்ள சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சசிபெருமாள் மனைவி மகிழத்தை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை அளித்தார்.
சசிபெருமாள் மரணத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் மறைந்த சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக எப்போதும் துணையாக இருக்கும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இன்று மாலை ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக சார்பில் திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் மனு அளிக்க உள்ளார். அதில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.
சசிபெருமாள் என்ன நோக்கத்திற்காக போராடினாரோ அந்த நோக்கம் நிறைவேற திமுக பாடுபடும். 2016ல் திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்று ஸ்டாலின் கூறினார்.


நினைவு மண்டபம் கட்ட ரூ. 5 லட்சம் நிதி

                                      
                                             
சசிபெருமாள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு

ரூ.5 லட்சம் நிதியை வைகோ, தொல்திருமாவளவன், குமரிஅனந்தன்,

தமீம் அன்சாரி, ராமகிருஷ்ணன் ஆகியோர் விவேக்கிடம் வழங்கினர். 

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

சசிபெருமாள் மகள் கவியரசியின் படிப்புச் செலவு முழுவதையும் பா.ம.க.

ஏற்கும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

 பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை மறைந்த சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காடு கிராமத்திற்கு வந்தார். பின்னர், அவர் சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து சசிபெருமாளின் உருவப்படத்திற்கு அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு அவரது மனைவி மகிளம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த போராடி உயிரிழந்த, சசிபெருமாளின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக சென்னையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எழுதிய கடிதிய கடிதத்தை, அவர் வாசித்து காட்டினார்.


சசிபெருமாள் மகன் உண்ணாவிரதம்

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி, மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள மேட்டுக்காட்டில் காந்தியவாதி சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பாக அவரது மூத்த மகன் விவேக் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மாலையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது சகோதரி கவியரசி பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.         

கீழே கிளிக் செய்க

                                                                              






-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்‘

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சசிபெருமாளின் உயிர்த்தியாகம் ... வருங்காலச் சந்ததிக்காகத்தான்...!

மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த ... காந்தியவாதி  தியாகி சசிபெருமாள்


காலில் விழுந்து வேண்டுகோள் விடுக்கும் போராட்டத்தில் சசிபெருமாள்







சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கனசாலை பேரூராட்சி, கலைஞர் கருணாநிதி நகர் மேட்டுக்காடு என்ற  ஊரைச் சேர்ந்த கந்தசாமி, பழனியம்மாள் என்பவர்களின் மகனான சசிபெருமாள், ஆறாம் வகுப்பு வரை படித்தவர்.
                                                               


தனது 16-வது வயதிலேயே மது ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

முதல் மனைவி கோவிந்தம்மாள் இரண்டு ஆண் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட அதற்குப்  பிறகு ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த மகிழம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.   இவர்களுக்கு சுதந்திர தேவி என்ற 14 வயது மகள் உள்ளார்.

சசிபெருமாளுக்குச் சொந்தமாக உள்ள இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தால் எந்த வருமானமும் இல்லை.  நாட்டு வைத்தியம், அக்குபஞ்சர் வைத்தியம், ஜோதிடம் எனப் பல தொழில்கள் தெரிந்திருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டவில்லை.

*கடந்த 2013 ஜனவரி 30-ம் தேதி சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, 33 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். டெல்லியிலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சென்னை நோக்கி மதுவுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் மேற்கொண்டார். இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மதுவுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி ‘தீபச் சுடர்’ போராட்டத்தையும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுவுக்கு எதிரானவர்களை ஓரணியில் திரட்டும் பணியை முன்னெடுத்திருந்தார் சசிபெருமாள். சில தினங்களுக்கு முன்பு, திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கருணாநிதி கூறியதும், அவரை நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
                                                                         

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஒரு பிரமுகரின் மனைவிக்கு அஞ்சலி




முதலாம் ஆண்டு அஞ்சலி


---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------

அண்ணனைக் காணாது ஆண்டொன்று போனதோ?

அண்ணனின் உள்ளமோ அன்றாடம் - அண்ணியை

எண்ணியே வாடியே ஏங்கித் தவிக்கிறதே!

உண்மையில் அன்பின் உயிர்.



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------

அண்ணன்   நினைவில் என்றும் வாழும் அண்ணி...





உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன்னை கரம் பிடித்தேன்                                                                     
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொண்ணை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆல‌ம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ 
என்னை பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் . . .

Related Posts Plugin for WordPress, Blogger...