திங்கள், 25 டிசம்பர், 2017

மண்ணிலே மனிதனான்...!



                          ‘இயேசு’  மண்ணிலே மனிதனான்...!                              




                                 
அன்பையே விதைக்க வந்த

              அருந்தவப் புதல்வன் இயேசு

தன்னையே தரவே இன்று

               தரணியில் மழலை யாகி
                     
புன்னகை இதழில் பூக்கப்

                பூவிழி விடியல் பார்க்க

அன்னையின் மடியில் நெஞ்சம்

                ஆளவே பிறந்தான் மண்ணில்!

சனி, 9 டிசம்பர், 2017

மயானத்தில் கேட்ட பாடல்

நண்பனின் மரணம்

                                                                             
அன்று, பள்ளியில் படித்த   பால்யகால நண்பன் கிருஷ்ணன் இறந்த செய்தி இன்று ( 8.12.2017) மாலை எனக்கு நண்பன் ஜான் கென்னடியின் அலைபேசியின் மூலம் தெரியவந்தது.

இறந்த நண்பன் கிருஷ்ணனைக் கடந்த சனிக்கிழமை அவனது மளிகைக்கடையில் அமர்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தான்.   அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்;  தற்பொழுது மிகவும்  நன்றாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.   ஆனால் அவனின் இறப்புச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் வருத்தப்பட்டேன்.


திருச்சியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் எனது நண்பன் அருள் ஜேம்ஸ் பால்ராஜைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.  அவனுக்குத் தகவல் தெரியவில்லை.

பிறகு உடல்தகனம்  நாளைக்குத்தானே இருக்கும் என்று விசாரித்தபோது,   ‘இல்லை... இன்றே உடல்தகனம் செய்யப்படுகிறது’ என்பதை அறிந்து இருவரும் மாலை வாங்கிக்கொண்டு இறுதி மரியாதை செலுத்த செல்லலாம் என்று புறப்பட்டுச் செல்கின்றபொழுது... எதிரே அமரர்வண்டியில் அவனது உடல் எடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.




புதன், 18 அக்டோபர், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (3)

தீபாவளி  அன்று...  மூன்று திரைப்படங்கள்!

ஒரு பார்வை



தீபாவளி  அன்று ...!

பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப்  படித்துக்  கொண்டிருந்த எழுபத்து ஒன்பதுகளில்...

தீபாவளி வருவதற்கு முன்னதாகவே எல்லோரும்  கருப்புத் துப்பாக்கி வாங்கினால் நான் வெள்ளைத்  துப்பாக்கியை வாங்கி வைத்து...

சுருள் கேப் ரோலாக வைத்துக் கொண்டு அதைச் சுட்டுச் சுட்டு  மகிழ்வதும்...
தீபாவளி அன்று கம்பி மத்தாப்பு, சாட்டை, சங்கு  சக்கரம்,  கலசம்,  பாம்பு மாத்திரை இதை வைத்துக் கொளுத்துவதும்... வெடிவெடிப்பவரை வேடிக்கை பார்ப்பதும் உண்டு.



எது எப்படியோ அப்பொழுதெல்லாம்  தீபாவளி நாளில்... அன்றைய தினம் சினிமா பார்ப்பது கண்டிப்பாக நடக்கும்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மரணம் – மார்ச்சுவரி – பாதித்த நாடகம்.



இதயங்கள் சங்கமம் 

                                     
                                      
                                                                                
 ஆசிரிய நண்பர் அவர்களின் மகன் வேலையின் நிமித்தமாக சேலம் சென்றிருந்த பொழுது  தந்தையிடம் சொல்லாமலே நண்பர்களோடு  சேர்ந்து இரு சக்கர வாகனங்களில்  ஏற்காடு சென்றிருக்கிறான்.  தினந்தோறும் தந்தையிடம் அலைபேசியில் பேசுபவன் அன்றிரவு எட்டு மணிக்குப் பேசியிருக்கிறான்.
 ‘‘ அப்பா நானும் நண்பர்களும் ஏற்காட்டிற்கு வந்தோம்.  நாங்கள்  இப்பொழுது புறப்படப் போகிறோம்.   அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டாம்... டவர் சரியாகக்  கிடைக்காது....கே.” எனத் தொடர்பைத் துண்டித்தான்.

ஏற்காட்டில்தான் அவன் பிறந்தான் என்பதால்தானோ என்னவோ அந்த இடத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அலாதிப்பிரியம்.

காலையில் ஆசிரிய நண்பர் பள்ளிக்கு வந்து விட்டார்.  

ஆசிரியரது அலைபேசி ஒலிக்கிறது.  

சார்... ஒங்களுக்குப் பையன் யாரும் இருக்காங்களா...?!

இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து பாலிஸி போடுவதற்காகத் தொந்தரவு செய்கிறார்கள் என்று  போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரிய நண்பர்.

சிறிது நேரத்தில் மீண்டும் அலைபேசி ஒலிக்கிறது.

சார்... கொஞ்சம் சொல்றதைக் கேளுங்க... ஒங்க பையன் ஏதும் ஏற்காட்டிற்குச் சென்றிருந்தாரா...?”

ஆமாம்... சார்...ஆமாம்... என்ன சார்...?!”

அவருக்கு  ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு... ஒங்களுக்குத்தான் கடைசியா போன் பண்ணி பேசியிருக்காரு... அதில பேரு அப்பான்னு இருந்திச்சு... அதான்…

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பார்வையில்லாப் பாடகி!


 பார்வையில்லாப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி!

வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு’ என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
   


1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீதரன், விமலா இணையருக்கு ஒரே மகளாய்ப் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இவரது பெற்றோருக்குத் தங்கள் மகள் தீர்க்கவியலாப் பார்வைக் குறைபாடு பெற்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. மிகச்சிறுவயதிலேயே ஒலிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே இராகம் தாளம் பிறழாமல் பாடும் விஜயலட்சுமியின் திறனைக் கண்ட அவர் தந்தை எம். எஸ். அம்மா, ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம்  ஆகியோரின் செவ்வியல் ஒலிநாடாக்களைக் கேட்கும்படிச் செய்தார்.
சிறுவயதில் கிடைத்தவொரு வீணையில் பாட்டு வாசிக்கப் படித்தார் விஜயலட்சுமி. பின்னர் இவரது தந்தை ஒற்றைக் கம்பி வீணை ஒன்றை அமைத்தளித்தார். இதன் காரணமாக இவருக்கு ஒற்றக்கம்பி வீணை காயத்ரி என்ற பெயர் கிட்டியது.  குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே இந்த வீணைக்குக் காயத்ரிவீணை என்னும் பெயரை அளித்தவர்.



விஜயலட்சுமிக்கு பார்வை பறிபோனாலும் 'குயில் ' போன்ற குரலுடன்  எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.

செவ்வாய், 6 ஜூன், 2017

புதிய உடன்படிக்கை - 12 நாடகம்



காட்சி  12

இடம்சாலை

பாத்திரங்கள்ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.

(அனைவரும்  நின்று கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள்)

செல்வம்: என்னா மச்சி... அதையே நெனச்சு ‘பீல் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி...?
                                                         
கனகராஜ்:  நம்ப பிளான்னே அவுட்டாயிடுச்சே... ஏன்டா ஜான்சன்... நாற்பதாயிரம் முடியாட்டி... ஒரு இருபதாயிரம் வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியதுதானே...

ஜான்சன்: அட நீ ஒன்னுடா... அவள் ஒத்த ரூவாகூட வாங்கிட்டு வர முடியாதுன்டா... அட அதை வுடு... குடிக்கிற விசயத்த... எங்க அப்பாக்கிட்ட சொல்லுவாளாம்...

செல்வம்: ஒங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டாங்களா...?

ஜான்சன்: ஆமாடா...!  இவ்வளவு நாளும் அவருக்கு... இந்த விசயம் தெரியாது...

சேகர்: என்ன ஆச்சு... விசயத்த சொல்லுடா...?

ஜான்சன்: என்ன ஆச்சா...! அவ்வளவுதான் மனுசன் ஆடித் தீத்திட்டாரே... அடிக்காத குறைதான்... அப்பப்பா என்னா புத்திமதி... ஈன்னு கேக்க முடியலை... ஓரே தலைவலி... போதும் போதும்ன்னு ஆயிடுச்சு... எல்லாத்துக்கும் காரணம் எனக்கு வந்து வாய்ச்சிருக்கிறாளே... அவதான்...!

கனகராஜ்: டே... மச்சி... ஓ லைப் இப்படி ஆகுமுன்னு நாங்கெல்லாம் நெனச்சுக்கூடப் பாக்கலைடா... நீ என்னடா பாவம் செஞ்சா...?

ஜான்சன்:  அதான்டா எனக்கும் தெரியலை...!

சேகர்: தெரியலை... இப்ப செஞ்சிக்கிட்டு இருக்கிறதே பாவம்தானே...

ஜான்சன்: இருக்கிற கடுப்புக்குப் பொளீர்ன்னு வச்சிடுவேன்டா...(அடிக்க கையை ஓங்க நகர்ந்து கொள்கிறான் சேகர்)

கனகராஜ்:  டே விடுறா மச்சி... ஆமா... நேத்தைக்கி ஆளையே இங்கிட்டு காணாமே...

ஜான்சன்: அது பெரிய கதைடா... முந்தா நாளு புல்லா கிக்கில போனேன்னா... பணம் அவுங்க அப்பன்ட்ட வாங்கிட்டு வர முடியாதின்ட்டாளா...

செல்வம்: ஆமா...

ஜான்சன்: ச்சீ... என்னா லைப்...? என்னா லைப்...? பணத்துக்கும்... மனசுக்கும் மசிய மாட்டேங்கிறாளே... லைப்ல ஒரு என்ஜாய்மென்டே இல்ல... அதான் நேத்து மனசு தாங்காம தனியாத் தண்ணி அடிக்கப் போயிட்டேன்...

கனகராஜ்: இருந்தாலும் நீ இப்படி நடந்திருக்க கூடாதுடா... ஏண்டா நாங்கள்ளலாம் இருந்தா... ஒனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லமாட்டோம்... தப்பு பண்ணிட்டாடா...

ஜான்சன்: பணம் வேற பத்தாம இருந்திச்சு... அதான் கோவிச்சிக்காதிங்கடா... இன்னக்கி புல்லா அடிக்கலாம்...

கனகராஜ்: அதனால என்ன...?  இன்னக்கி அடிச்சி இழப்பை ஈடு செஞ்சிடுவோம்... சொல்ல மறந்திட்டேன்...

ஜான்சன்: (ஆவலாக) என்னடா...?

கனகராஜ்: பம்பாய் ரெட்லைட் ஏரியாவுல இருந்தவளாம்...

நம்ம தமிழ்நாட்டுக்காரியாம்... அங்க அவளக் கடத்திட்டுப் போயிட்டாங்களாம்... இப்ப நம்ம டவுன்லதான் குடியிருக்கிறாளாம்... தெரியுமா...?

ஜான்சன்: இப்பத்தானே சொல்றா... எனக்கு எப்படிடா தெரியும்... ஆமாம் அதுக்கென்னடா...?

கனகராஜ்:  அதுக்கு என்னான்னா கேக்கிறா... அதுக்கு என்னடா தங்கத்துக்கு... சும்மா தேர்ல வர்ற சிலை மாதிரி... ஆட்டோவில நேத்து வந்தா பாரு... அய்யய்யோ... தக்காளிப்பழம் மாதிரி சிவப்பு... அவள நீ நேரா பாத்தீன்னா அசந்து போயிடுவாய்... தெரியுமுல்ல...

ஜான்சன்: அப்படியாடா... அவ்வளோ அழகா...!

கனகராஜ்: எவ்வளோன்னு கேக்கலாமுன்னு போனேன்னா... அப்பா அசந்து போயிட்டேன்...

ஜான்சன்: ஏன்டா...?

கனகராஜ்:  அந்த தொழில்ல இருந்து விடுபடத்தான் இங்க ஓடியாந்தேன்... யாரோடாவாவது ஒருத்தர்ட்டயே இருந்து வாழனுமுன்னுதான் வந்தேன்... நீங்க ரெடின்னா... நானும் ரெடின்னுட்டா...

சேகர்:  துண்டக்காணோம்... துணியக் காணோமுன்னு ஓடியாந்திருப்பியே...

கனகராஜ்: எ பொண்டாட்டி டின்னுக்கட்டிடுவாள்...

ஜான்சன்: அளு நல்லா இருப்பாளா...?

கனகராஜ்: இருப்பாளான்னா கேக்கிறாய்...?  இந்தா அட்ரஸ் (அட்ரஸ கொடுக்கிறான்) போய்ப்பாத்துட்டு அப்புறம் சொல்லு... அவளும் வாழ்ந்த மாதிரி இருக்கும்... நீயும் வாழ்க்கைய அனுபவிச்ச மாதிரியும் இருக்கும்... ஒனக்கு வசதியிருக்கு... அனுபவி ராஜா அனுபவி...

ஜான்சன்: நல்ல ஐடியா கொடுத்தாடா... அப்புறம் எ பொண்டாட்டி எ காலப்புடுச்சு கதறுவா...‘ஏங்க ஒங்க சொல்படி கேக்கிறேன்னு...என்னா நா சொல்றது...?

கனகராஜ்: சொல்றது எல்லாம் சரிதான்... சரி... உடனே ஆக வேண்டியத பாரு...

ஜான்சன்: நாளைக்கே போய்ப் பாக்கிறேன்...

கனகராஜ்:  அதான் பாப்பியே...  இன்னக்கி ஆக வேண்டியது...

ஜான்சன்:  வாங்க போவோம்... ஒயின் ஷாப்புக்கு...
            (அனைவரும் செல்கின்றனர்)

                                                                                                                          

                                                   -தொடரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

சனி, 27 மே, 2017

புதிய உடன்படிக்கை - 11 நாடகம்




காட்சி – 11

இடம்மாளிகை

பாத்திரங்கள்:  ஆரோக்கியசாமி, ஜாக்லின் சித்ரா.




              (மாமனார் ஆரோக்கியசாமி தனியாக அமர்ந்து கொண்டு வெற்றிலையைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்.  அப்பொழுது உள்ளே வருகிறாள் மருமகள் ஜாக்லின்)



ஆரோக்கியசாமி: என்னம்மா...?  இன்னைக்கி வேலைக்கி போகலையா....?

ஜாக்லின்:  இல்லீங்க மாமா... லீவு போட்டுட்டேன்...

ஆரோக்கியசாமி:  ஏம்மா... ஒடம்புக்கு ஏதாவது...

ஜாக்லின்: அதெல்லாம் ஒன்னுமில்லைங்க மாமா...

ஆரோக்கியசாமி: வேறென்னம்மா...?

ஜாக்லின்:  வந்து...  வந்து... (தயங்கித் தயங்கி...) ஒங்கள்ட்ட எப்படி சொல்றதுன்னு பயமா இருக்கு...

ஆரோக்கியசாமி: என்னம்மா...?  என்னவா இருந்தாலும் சொல்லும்மா...

ஜாக்லின்: மாமா... அவரு... அவரு...

ஆரோக்கியசாமி: யாரு ஜான்சனா...?

ஜாக்லின்:   ஆமாங்க மாமா... அவரு தினமும் குடிச்சிட்டு வர்றாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: (ஆச்சர்யத்துடன் வேகமாக) என்ன...?  எ மகன் குடிச்சிட்டு வர்றானா...?  என்னம்மா சொல்றாய்...?  என்னால நம்பவே முடியலையே...!

ஜாக்லின்: நா சொல்றேன் நம்புங்க மாமா...

ஆரோக்கியசாமி: எப்பயில இருந்தும்மா...?

ஜாக்லின்:  எப்ப இருந்து குடிக்கிறார்ன்னு எனக்குத் தெரியாதுங்க மாமா... கல்யாணமான முதல் ராத்திரிக்கே குடிச்சிட்டு வந்தாருங்க மாமா... நானும் ஒங்கள்ட்ட சொல்லாமலே அவரைத் திருத்திடலாமுன்னு நெனச்சேன்... வரவர ரொம்ப ஓவரா குடிக்கறாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: அப்புடியா... இத ஏம்மா... என்னிட்ட உடனே சொல்லலை... இப்படிக் குடிச்சிட்டு வந்தா குடும்பம் எப்படி நடத்துவான்...?  ஆமா ஒன்ட்ட எப்படி நடந்துக்கிறான்...

ஜாக்லின்: என்னத்தங்க மாமா சொல்றது...?

ஆரோக்கியசாமி:  இப்போ எங்கே போயிருக்கான்...?

ஜாக்லின்விடிஞ்சா வெளியே போறாரு... பொழுது சாஞ்சா வீடு திரும்புறாரு... சமயத்தில பத்து... பன்னெண்டு மணின்னு ஆயிடுதுங்க மாமா...

ஆரோக்கியசாமி: வரட்டும்... ராஸ்கல்... காலிப்பயலுகளோட சேர்ந்துக்கிட்டு... குடிச்சிட்டு கூத்தடிக்கிறானா...?  தலைக்கு மேல வளர்ந்திட்டானேன்னு பாக்கிறேன்... இல்ல...

ஜாக்லின்: அவசரப்படாதிங்க மாமா... ஆத்திரப்பட்டு ஒன்னும் ஆகப்போறது ஒன்னுமில்லை... மீனு தூண்டியில மாட்டிக்கிடுச்சு... மீனக் காப்பத்தணும்... அவசரப்பட்டு ஆகப்போறது ஒன்னுமில்லை... 

ஆரோக்கியசாமி: சரிம்மா... நீ சொல்றதும் சரிதான்... இப்ப என்ன செய்யலாம்...?

ஜாக்லின்: அவர்ட்ட எப்படி நாசுக்கா எடுத்துச் சொல்லனுமோ... அப்படி எடுத்துச் சொல்லுங்க மாமா... எப்படியோ  தூண்டில்ல மாட்டிக்கிட்ட மீன காப்பாத்துங்க மாமா...

ஆரோக்கியசாமி: ம்...ம்... முயற்சி செய்றேன்... ஆண்டவா... இது எனக்கு வந்த சோதனையா...?
                                         


                                                                           
                                                                                                                                                                                                                                                    -தொடரும்...
                                                                                                                                                        
 -மாறாத அன்புடன்,
   மணவை ஜேம்ஸ்.  


Related Posts Plugin for WordPress, Blogger...