ஞாயிறு, 24 ஜூலை, 2016

புதிய உடன்படிக்கை - 9 -நாடகம்



புதிய உடன்படிக்கை

 

காட்சி  9
இடம்: பூங்கா

பாத்திரங்கள்: ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.
                                                                     
ஜான்சன்:  காந்தி பார்க்கில... நாம சுதந்திரமா பிராந்தியடிச்சிட்டு இருக்கோம்... பாத்தீங்களா...?
                                                                        



கனகராஜ்: இதுக்காகவா சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரு... மதுவிலக்குதானே அவரு கொள்கை...

செல்வம்: நம்ம கௌவர்மென்டே... காந்தியப்பத்தி கவலைப்படலை... நாம எதுக்குக் கவலைப்படனும்...

சேகர்:  சரி... அதை வுடு... இந்த பார்க்க பராமரிக்கிறவங்கனாலும் ஒழுங்கா பராமரிக்கிறாங்களா...?

செல்வம்: ஒழுங்கா இருந்தா நாம இங்க வந்து தண்ணி அடிக்க முடியுமா...?  நீ ஒண்ணுடா வெவரம் தெரியாத ஆளா இருக்கியேடா...!

கனகராஜ்:  இப்படி இருக்கிறதுதாண்டா நமக்குச் சரி...

ஜான்சன்:  சரி... அது இருக்கட்டும்... வேற ஏதாவது வாழ்க்கைக்குப் பயனுள்ளதா ஏதாவது பேசுங்கடா...?

செல்வம்:  நமக்கும் அதே சிந்தனைதான்... ஏதாவது தொழில் செஞ்சு பெரிய ஆளா ஆகணுமுன்னு...

சேகர்:  என்ன தொழில்டா...?

செல்வம்:  அதான்டா  தெரியலை...

ஜான்சன்:  சொத்து இருக்கு...

கனகராஜ்:    சொத்த வச்சு சுட்டா திங்க முடியும்... வித்து வேணுமுன்னா செலவு செய்யலாம்... அதுக்கும் ஒங்க அப்ப விடுவாரா... என்ன...?  என்னிட்ட ஒரு நல்ல அய்டியா கைவசம் இருக்கு...!

ஜான்சன்:  என்ன அய்டியா...?  வருமானம் ஏதாவது கிடைக்குமா...?

கனகராஜ்:  கிடைக்குமாவா...?  டெய்லி நானூறு... அய்நூறு சம்பாதிக்கலாம்...!

ஜான்சன்:    நிஜமாவா...?

கனகராஜ்:  பொய்யா சொல்றேன்... கிளப் ஒன்னு... சீட்டாட ‘மனமகிழ்மன்றம்’ன்னு ஆரம்பிச்சோமின்னா போதும்... அப்புறம் பாரேன் வருமானத்தை...!

செல்வம்:  சூப்பர்டா... நான் கூட இதையேதான் நெனச்சேன்... நீ சொல்லிட்டாய்...!

ஜான்சன்:      சரி... எவ்வள செலவாகும்...?

கனகராஜ்:  என்னா... ஒரு  முப்பதாயிரம்,  நாற்பதாயிரம் வேணும்...

ஜான்சன்:  முப்பதாயிரம்... நாற்பதாயிரமுன்னு சொன்னா... பணத்துக்கு என்னடா பண்றது...  எங்க அப்பாட்ட கேக்க முடியுமா...?

கனகராஜ்:  ஒங்க அப்பாட்ட எதுக்கு கேக்கிறாய்... ஒ ‘வொய்ப்’ட்ட ஏதாவது தொழில் செய்றமுன்னு சொல்லி ஒரு நாற்பதாயிரம் பணம்... அவுங்க அப்பாக்கிட்ட இருந்து வாங்கித் தரச் சொல்லு...

செல்வம்:  என்னமோ இதுக்கு போயி... பயந்துகிட்டு... நீ மொதல்ல முதல் போடு... நாங்க ஒன்ட்ட வேலைக்கு இருக்கோம்...

ஜான்சன்:    நல்ல அய்டியாதான்... ஆனா அவள் இதைக் கேக்கனுமே...

கனகராஜ்:  கேக்க வைக்கனும்...  புருஷன் சொல்றதத்தான் பொண்டாட்டி கேக்கனும்... பொண்டாட்டி சொல்றத புருஷன் கேக்கக்கூடாது...

ஜான்சன்:  ஆமாமா... நா எப்படியும் எ பொண்டாட்டிய பணம் வாக்கி வர வச்சிடுறேன்... போதுமா...?

கனகராஜ்: அது போதுமே... அப்ப சீக்கிரம் போயி ஆக வேண்டியதப் பாருப்பா... நாங்களும் கௌம்புறோம்...

ஜான்சன்:  சரி... நானும் ஆக வேண்டியதப் பாக்கிறேன்...!


                                                                                                          


                                                                                                                                 
             

                                                                                                            தொடரும்...


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.








































Related Posts Plugin for WordPress, Blogger...