தண்ணீர் மூழ்கிவிட்டது

வானத்துக்கு
வாந்தி பேதியா?
வருணனுக்குப்                                             
பைத்தியம் பிடித்துவிட்டதா?                                

மேகக் கூந்தலை
அவிழ்த்துப் போட்டு
வானம்
பேயாடியதோ?

சூரியனுக்கே
இருட்டடிப்பா?
எல்லாக் காலத்து
எல்லாப் பெண்களின்
கண்ணீரெல்லாம்
ஒன்றாகச் சேர்ந்து
கொட்டியதோ?

மின்னல் தந்தங்கள் ஒளிர
இடி முரசு முழங்க
மேக யானைப் படைகள்
மோதினவோ?
அவற்றின் ரத்தம்
சொரிகிறதோ?


புவி வெப்பமானதால்
வானத்திற்கு உடலெல்லாம்
அபரிமித வேர்வையோ?                                                                                                                              

                                                                                      கவிக்கோ அப்துல் ரகுமான்
வானம்
பாக்கி வைத்திருந்ததை எல்லாம்
வட்டியோடு
சேர்த்துக் கொடுத்துவிட்டதோ?