சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து!

     எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவு !


தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா


இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா




கவிஞர் மருதகாசியின் இந்தப்பாடல் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

          

நாம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்கிறோம்.  எதையுமே
 முதன்மையாகக் கருதுவதில்லை. எதையாவது இழந்த பிறகுதான் அதன்
 அருமையை உணர்கிறோம். 

அன்றாடம் விபத்துகள் பற்றிய செய்திகள் வராமல் இருப்பதில்லை. வாகனங்கள் மற்றும் மக்கள்தொகை பெருக்கமும் முக்கியக் காரணம் என்றாலும்கூட; அதற்கேற்பச் சாலைகள் இல்லாதததும், சாலை விதிமுறைகளைக் கடைபிடிக்காதததும்தான் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கியக் காரணம். 

------------------------------------------------------------------------

வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விபத்து: கால்களை இழந்து தவிக்கும் பரிதாபம்

                                                       



பட்டம் வாங்கிய கையோடு தனது ஏழைப் பெற்றோரின் கண்ணில் காட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் சென்ற வேளாண் கல்லூரி மாணவியின் வாழ்க்கையை விபத்து ஒன்று புரட்டிப் போட்டுவிட்டது.
             

திங்கள், 20 ஏப்ரல், 2015

தூக்கிலேற்றிய காதல் !





தூக்கிலேற்றிய  காதல்! 

                                                            - ஒர் உண்மைச் சம்பவம்.13.03.2015 

                                                                           

                                           
          காதலின் சுவை மரணத்தில்தான் தெரியும் போலிருக்கிறது. தினமும் நாளிதழ் படிக்கும் வழக்கம் எனக்கிருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே கொட்டிக்கிடக்கும் கொலை கொள்ளை தற்கொலை போன்ற செய்திகளின் வீச்சும் வீரியமும் அவை நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கும்வரை புரிவதில்லை.

          அப்படி என் ஊரில் என் உறவொன்றிற்கு நடந்த ஒரு சம்பவத்தின் பின் தான் நாளிதழ்களில் வரும் செய்தியின் கனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

சனி, 7 மார்ச், 2015

கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!





கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!




          கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் பிறந்த குழந்தை

 

நாளிதழில் படித்ததும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய  செய்தி இதுதான்.

சேலத்தில் இருந்து


சுற்றுலா வந்த 21 வயது கல்லூரி மாணவிக்கு ‘திடீர்’ பிரசவம்


கழிப்பறையில் குழந்தை பிறந்தது


   சேலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இருந்து 300 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 5 பஸ்களில் கடந்த 22-ந்தேதி கேரளாவுக்குச் சுற்றுலா சென்றனர்.  அவர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு கோவை வழியாக சேலம் செல்வதற்காகப் பஸ்களில் வந்து கொண்டிருந்தனர்.  நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் வந்த பஸ் தமிழக – கேரள எல்லையில் உள்ள கந்தேகவுண்டன் சாவடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

     அப்போது அந்த பஸ்சில் வந்த 21 வயது மாணவி ஒருவருக்குத் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது.  இதனால் அவர் வேதனையில் அலறித்துடித்தார்.  அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே பஸ் வந்து கொண்டிருந்த்தால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஆனால் அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமானதால் சக மாணவிகளும், ஆசிரியைகளும் செய்வதறியாது திகைத்தனர்.

     இதையடுத்து பஸ்சை க.க.சாவடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தினார்கள்.  அங்குள்ள கழிவறைக்கு செல்லுமாறு அந்த மாணவியிடம் ஆசிரியைகள் கூறினார்கள்.  உடனே அந்த மாணவி கழிவறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.  சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டது.  இதைக் கேட்டதும் சக மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     பின்னர் ஆசிரியைகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் உதவியுடன், கழிவறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.  கழிவறைக்குள் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.  அவர் அருகில் ஒரு பெண் குழந்தையும் கிடந்தது.  இதைப் பாத்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சில் அந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டனர்.  ஆனால் அந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது தெரிய வந்தது.  மாணவி மயங்கிய நிலையில் இருந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிதோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.


     இந்த சம்பவத்தால் சுற்றுலா வந்த மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.  சுற்றுலா வந்த இடத்தில் பிரசவமா? என்று அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

 

     மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியாமல் அவரை எப்படி சுற்றுலாவுக்கு அழைத்து வந்தீர்கள் என்று சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அதற்கு அவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது.  அப்படி தெரிந்திருந்தால் அவரை சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருக்க மாட்டோம்.  திருமணமாகாத, அதுவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்திருந்தால் நாங்கள் அந்த மாணவியின் பெற்றோரிடமே தெவித்திருப்போமே என்று கூறினார்கள்.  இது தொடர்பாகப் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

     இதைத்தொடர்ந்து விசாரணை பேரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.  போலீசார் இது பற்றி அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.  இதற்கிடையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் நேற்று மதியம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அந்த மாணவி யாரையாவது காதலித்தாரா?  கர்ப்பத்துக்கு யார் காரணம்?  என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...