திங்கள், 24 ஏப்ரல், 2017

ஜெயகாந்தன் பிறந்தார்



ஞானபீட விருது பெற்ற தமிழ்ப் படைப்பாளி
ஞானபீட விருது பெற்ற சிறந்த தமிழ்ப் படைப்பாளியான ஜெயகாந்தன் (Jayakanthan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் விவசாயக் குடும்பத்தில் (1934) பிறந்தார். இயற்பெயர் முருகேசன். பள்ளிப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால், 5-ம் வகுப்போடு படிப்பு நின்றது. பிறகு விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்தார்.
* பொதுவுடைமைக் கோட்பாடுகளை யும் பாரதியாரின் எழுத்துகளையும் மாமாவின் வாயிலாக அறிந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணியாற்றினார். அங்குப் பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டு இலக்கியத்தில் நாட்டம் பிறந்தது.
* வேலை செய்துகொண்டே புலவர் க.சொக்கலிங்கத்திடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்கள் கற்றார். காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடைகள், மாவு மில், தியேட்டர் எனப் பல இடங்களில் வேலை செய்தார். கைவண்டி இழுத்தார். இதற்கிடையில், ஓய்வு நேரத்தில் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.
* இவரது முதல் சிறுகதை 1950-ல் சௌபாக்கியம்என்ற இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். சரஸ்வதிஇதழில் இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கிய பிறகு, ஓரளவு பிரபலமானார். தாமரை’, ‘கிராம ஊழியன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.
* 1958-ல் வெளிவந்த இவரது ஒரு பிடி சோறுசிறுகதை இலக்கிய வாதிகளின் பரவலான பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டிகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. தனது அரசியல், கலையுலக, இதழியல், ஆன்மிக அனுபவங்களைத் தனித்தனி நூல்களாகப் படைத்தார்.
* ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’,
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்உள்ளிட்ட இவரது படைப்புகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச்செருப்பு கடிக்கும்ஆகிய திரைப்படங்களை இவரே இயக்கினார்.
* ஏறக்குறைய 200 சிறுகதைகள், 30-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 17 நாவல்கள், ஏராளமான கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என நிறைய எழுதினார். 

வியாழன், 13 ஏப்ரல், 2017

தேசபக்தர்களே கண்களை மூடிக் கொள்ளுங்கள்!




ஆடையை இழந்தது விவசாயிகள் தேகம் அல்ல இந்திய தேசம்!



தேச பக்தர்களே
கண்களை மூடிக் கொள்ளுங்கள்
ஆடையை இழந்தது
விவசாயிகள் தேகம் அல்ல
இந்திய தேசம்!


ஆடை களைந்தான்
விவசாயி
அம்மணமாய் நிற்கிறது
அரசு!


ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (2)

‘உத்தமபுத்திரன்’ 


பள்ளி  வகுப்பில் சக மாணவர்கள் இப்படி எழுதிக்காட்டினார்கள்.

‘சி  வா  ஜி
வா  யி  லே
ஜி  லே   பி

மேலும் கீழுமாக படித்தாலும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’  என்று வருவதைப் பார்த்து வியந்து அன்று ஆச்சர்யப்பட்ட காலமது.

‘உத்தமபுத்திரன்எங்கள் ஊர் டூரிங் டாக்ஸில் ஓடிக்கொண்டு இருப்பதை அறிந்து பார்க்கச் சென்றேன்.

உலக அளவில் தன்னுடைய நாவல்களால் சரித்திரம் படைத்தவர் பிரபல பிரெஞ்ச் கதாசிரியர் அலெக்ஸாண்டர் ட்யூமா. இவருடைய பல நாவல்கள் பெரும் வெற்றிப் படங்களாக ஆங்கிலத்தில் பல முறை எடுக்கப்பட்டன. அந்த வகையில் அவருடைய நாவல்களில் ஒன்று      ‘தி மேன் இன் அயன் மாஸ்க் (Man in the Iron Mask). இது ஹாலிவுட்டில் 1939-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதை 1940-இல் மாடர்ன் தியேட்டர் முதலாளி டி.ஆர். சுந்தரம் 1940இல் ‘உத்தமபுத்திரன் என்ற பெயரில் எடுத்தார். பி.யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது.


Related Posts Plugin for WordPress, Blogger...