சனி, 27 ஜூன், 2015

கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை...



உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015


                                                                              
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய 

 ஆறுதல் பரிசு பெற்றவர்கள்


வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை...



இணையத் தமிழே இனி !

பஃறொடை வெண்பா


மணவை ஜேம்ஸ்.



ஆறா வதுபூதம் !  ஆறறிவின் அற்புதம்!

பேறாம்நீ மானிடத்தின் பேராறு கண்டடைந்த

ஆழிநீ என்பேன். அகிலத்தை ஆள்பவளே!

வாழியே எல்லாம் வடித்துத் தருபவளே!

எங்கள் மகாகவிக்குக் கிட்டாப் புதுவார்ப்பு

எங்களுக்குக் கிட்டிட்ட ஈடில்லா மாசத்தி

நீரின்றி யேயமையா ஏதுமே நாட்டினிலே               

நீரிணைப்பாய் அன்புள்ள நெஞ்சத் தவரை

பலதுறை பல்லுறவுப் பெட்டகமாய் இந்த

உலகைச் சமைத்தவளே! உற்றுனில் கற்போம்!

இணையப் பெருவரமே! நீவாழ வாழும்

இணையத் தமிழே இனி!


 

கண்ணீர் இலங்கையாய்க் காட்சிகள் வேண்டாமே!

மண்ணில் புதைந்து மடிந்தது போதுமே!

வென்று மகிழ்ந்தினி வெற்றிக் கொடிகட்டி

என்று விடுதலை என்றைக்குக் காண்போம்?

கனவினில் வாழ்ந்தே கழித்தது போதும்

நனவினில் வாழுகின்ற நாள்வரும் எப்போது?

வாடும் தமிழினத்தின் வாட்டத்தைப் போக்கியே

பாடும் குயில்களெனப் பாரில் மகிழ்ந்து
                                                                 
வலைத்தளம் பற்றுகின்ற வண்ணத் தமிழாய்

கலைத்தனம் மட்டுமின்றி காயம்பட் டோர்க்காய்

இணைப்பாய்த் தமிழனையே ஈழம் கிடைக்க

இணையத் தமிழே இனி!



-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in


  


சனி, 13 ஜூன், 2015

‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.


‘இதயங்கள் சங்கமம்’




ஆத்ம திருப்திக்காக



                    ஆசிரியர்கள் கடைசிவரை ஆசிரியராகத்தான் இருப்பார்கள்.

ஆனால் அந்த ஆசிரியர்கள்தான் பெரிய வழக்கறிஞர்களையும், 

மருத்துவர்களையும்,  ஐ.ஏ.எஸ்,   ஐ.பி.எஸ். அதிகாரிகளையும்,

பேரறிஞர்களையும் உருவாக்குபவர்கள் என்கிற அரிய பணியைச்

செய்கிறார்கள் என்பதால் நான் ஆசிரியர் பணியை அரும்பணியாக ஏற்று

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன்.  இருந்தாலும் நான்

படிக்கிற காலத்திலிருந்து இன்று ஆசிரியப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும்

இன்று வரை நாடகம் போடுவது, கதை எழுதுவது,  நல்லக் கருத்தை வைத்துக்

குறும்படம் எடுப்பது என்பது என் ஆத்ம திருப்திக்காகச் செய்வது.  சமீபத்தில்

 ஓர் இளைஞன் விபத்துக்குள்ளாகி,  மூளைச்சாவு ஏற்பட்ட காரணத்தால்

அவரின் இதயம் தானமாகக் கொடுக்கப்படுகிறது என்கிற கருத்தை மையமாக

வைத்து,  நான் இயக்கிய ‘இதயங்கள் சங்கமம்’ நாடகத்தில் நான் தமிழக

முதல்வர் அவர்களின் வேடமேற்று நடித்தது ஆயிரம் மடங்கு ஆத்ம திருப்தி.

                                                                                                                                   -மணவை.




                                                                                                                     
_________________________________________________________________________________
தமிழாசிரியர் மணவை  ஜேம்ஸ்.
_________________________________________________________________________________
                                                                                                       நன்றி- பாக்கியா(27-3-2009)




புதன், 3 ஜூன், 2015

கலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்




சாதித்த சரித்திரமே!  போராளியின் பூபாளமே!  வாழ்க... வாழ்க...!







 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  

92ஆவது பிறந்த நாளுக்கு...



இத்தமிழ்க் கலைஞனின் 

இதயப்பூர்வமான வாழ்த்துகள்





‘இதயங்கள் சங்கமம்’ - என்ற என்னுடைய நாடகத்தில் நான் )


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

manavaijamestamilpandit.blogspot.in
manavaijamestamilpandit@gmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...