ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு பார்வையின் மௌனம்...! -சிறுகதை.




ஒரு பார்வையின் மௌனம்


(மணவை ஜேம்ஸ்)

பிரியமான கவிஞர் வசந்த லீலாவிற்கு,

               தங்கள் இரசிகன் அழகேசன் எழுதுவது நலம்.  நாடுவதும் அதுவே!
‘கரும்புவில்இதழில் இந்த வாரத்தில் வெளியான தங்களின் கவிதையில் நான் மிகவும் இரசித்துப் படித்த வரிகள்,

‘நிலாவே!
 நீ என்ன தோசைகல்லா?
ஒவ்வொரு ராத்திரியும்                 
என்னைச் சுடுகிறாயே!
நீயும்...
என்னைச் சுட்டுக் கொல்லாதே!

 நிலவும் தனிமையில்...
உலவும் வெறுமையில்...
வஞ்சச் சுமைதனை
நெஞ்சம் தாங்குமோ?  

               தங்கள் கவிதைக்கு அப்படியொரு காந்தசக்தி இருக்கிறது...! படிக்கின்றபொழுது அதோடு ஒட்டிக்கொள்கிறேன் என்று சொல்வதா? அல்லது என்னைக் கவர்ந்து கொள்கிறது என்று சொல்வதா? என்றே எனக்குத் தெரியவில்லை! 

              கவிதைக்குள் சோகம் இழையோடுகிறதே! சோகத்தைப் பங்கிடுவதும் சுகம்தானே! ‘நீயும் சேர்ந்து என்று நீங்கள் சுட்டு விரலை நீட்டி யாரைச் சொல்கிறீர்கள்?  வரும் கடிதத்தில் விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

              தங்களின் ஒவ்வொரு கடிதத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  எனது கடிதத்திற்குத் தவறாமல் பதில் எழுதுவதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                        அன்பு நெஞ்சன்,
                                                                                                           க.அழகேசன்.

- கடிதத்தை  உள்வைத்து நாக்கின் எச்சிலைக் கவருக்குக் கொடுத்து ஒட்டினான்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

பெரியாரைச் செருப்பால் அடித்தாயே!



அவர்தான் பெரியார்...!










செருப்பால் அடித்தாயே...!
உன் தாயிடம் கேள்...
உனக்குத் தந்தை யாரென்று...?
யாரென்று தெரியவில்லையென்றால்
அவர்தான் பெரியார்...!


வாழும்போதே...
வண்டியில் போகும்போதே
அவர்படாத செருப்படியா...?

அடியே!  அடி...!
 உனக்காக உழைத்தவர் அவர்தான்...
உனக்குத் தெரியாது...!
அவர்...
வாழும்போது -நீ
வாழ்ந்திருக்க மாட்டாய்...!
அடியே!  அடி...!


பெண்கள் உருப்படியாக-
தேவதாசிமுறையை 
ஒழிக்கப்  பாடுபட்டவருக்குச் செருப்படியா?
அவர் பட்டபாட்டிற்கு...
இன்னும் பலன் கிடைக்கவில்லை!
அடியே!  அடி...!
                                                                   






மூத்திரப்பையை இடுப்பில் கட்டிக்கொண்டு
மூடச்சாத்திரங்களை
மூடச்செய்யப்
பகுத்தறிவு விளக்கேந்தி
பாரெங்கும்  96 வயதிலும்
பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றிப்
போராடிய வீரனுக்கு...
வீனர்களின் விபரீதம்...!
 நீர்  பார்த்தீரா....?

இவர்களுக்காகத்தானே...
இடஒதுக்கீடு கேட்டாய்...!
இவர்கள் ஒதுங்க இடம் கொடுத்தவனுக்கு...
இவர்கள் ஒதுங்கும் இடம் பார்த்தீரா...?

நாய்கள்கூட-
தன்காலில் படாமல்
நாகரிகமாகச்  சிறுநீர்கழிக்கும்  பார்த்தீரா...?

தந்தை பெரியார்...
நாய்கள் பதினைந்துக்கும் மேல் வளர்த்தாராம்...!
அந்த நாய்கள்...
அவர்   பயணிக்கும்  வண்டியில் பயணிக்கும்...
அரங்கத்தின் கீழே அமர்ந்திருக்கும்...
அந்த நாய்கள்...
நன்றியுள்ள நாய்கள்...!





ஒரு சமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோலக் கார் வைத்துக்கொள்ளாத காலம் அது, இருட்டு அதிகம் இருந்த இடத்திலிருந்து ஒருவன் என் மீது செருப்பினை வீசினான்; அது எனது ரிக்‌ஷா வின் முன் விழுந்தது. அதனை எடுக்கச்சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது. செருப்பு நல்லதாக இருக்கின்றது; ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்! திருப்பிவிடு அந்த இடத்திற்கு இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிக்‌ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்‌ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த இடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான். மிக்க நன்றி! இரண்டு செருப்பையும் வீசியமைக்கு என்று சொல்லிவிட்டு ஜாகைக்குத் திரும்பினேன்.” (விடுதலை-24.03.1973) 


பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி மட்டும் அல்ல ஒரு போராளி ,ஆம்

 மூத்திரப் பையை இடுப்பில் கட்டிக் கொண்டு 96 வயது வரை 

பகுத்தறிவைப்  பிரச்சாரம் செய்த ஒரு போராளி !



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.


தூக்கிலேற்றிய காதல் !





தூக்கிலேற்றிய  காதல்! 

                                                            - ஒர் உண்மைச் சம்பவம்.13.03.2015 

                                                                           

                                           
          காதலின் சுவை மரணத்தில்தான் தெரியும் போலிருக்கிறது. தினமும் நாளிதழ் படிக்கும் வழக்கம் எனக்கிருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே கொட்டிக்கிடக்கும் கொலை கொள்ளை தற்கொலை போன்ற செய்திகளின் வீச்சும் வீரியமும் அவை நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கும்வரை புரிவதில்லை.

          அப்படி என் ஊரில் என் உறவொன்றிற்கு நடந்த ஒரு சம்பவத்தின் பின் தான் நாளிதழ்களில் வரும் செய்தியின் கனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...4




சந்திப்பிழையின்றி எழுதுவோம்...4



பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

                    எச்சம் என்றால் என்னான்னு சொல்லாம... நீங்க பாட்டுக்குப் பெயரெச்சம் என்று சொன்னால் எப்படி?

                    எச்சம் என்றால் குறைவானது,   முழுமை பெறாதது/நிறைவு பெறாதது...  அவ்வளவுதான்.

                    அரைகுறையா புரியிறமாதரி இருக்கு... பெயரெச்சம் என்றால்... அதச் சொல்லவே இல்லையே?   

                    ‘பெயரெச்சம்’-ன்னா நிலைமொழி  எச்சமாக (வினைச்சொல்லாய்) இருக்கும்.  அடுத்து வரும் பெயர்ச் சொல்லைச் சார்ந்து பொருள் முற்றுப் பெற வருவது.

                    (எ.டு) ஓடிய குதிரை. (பெயரெச்சம்)

                                 ஓடிய - எச்சம் (எச்சம் எப்பொழுதும் வினைச்சொல்லாகத்தான் இருக்கும்.  வரும் சொல் பெயரைச் சார்ந்து வந்தால் பெயரெச்சம்;    வினையைச் சார்ந்து வந்தால் வினையெச்சம்... அவ்வளவுதான்.

                                 குதிரை - பெயர்ச்சொல் 




 “பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை; நல்ல
 பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை;  என்னைச் சொல்லிக் குற்றமில்லை:
காலம் செய்த கோலமடி;  கடவுள் செய்த குற்றமடி

“மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை;
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை“


“தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா – இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா


தடித்த எழுத்துகளாலான தொடர்கள் பெயரெச்சத் தொடர்கள்.  இங்கெல்லாம் வல்லினம் மிகாமை காண்க.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நேயம்! - பரிசு பெற்ற சிறுகதை.



       ‘ஆவி டாக்கீஸ்’ 
 -வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை

குறும்பட - சிறுகதைப் போட்டியில் 

ஆறுதல் பரிசு பெற்ற எனது சிறுகதை.

                                                                         
நேயம்!- 

(மணவை ஜேம்ஸ்)

                விடியாத அந்த வைகறைப் பொழுதில் சூளியாபட்டிக்குள் பால்காரர் மணியை அடித்தபடி நுழைந்தார். பால்காரர் மணியடித்தாலே மணி நான்கு என்று அர்த்தம்.
                                         

              வெயிலையும் பனியையும் வரவேற்கும் ஓலைக்குடிசையில் வசிக்கும் 
கதிரவனின் அப்பா, இராமசாமி அன்றாடங்காய்ச்சி. நீடித்துவந்த இருமலுக்கு கைவைத்தியமாய்ச் செய்த கஷாயங்கள் எடுபடாமல் போய் இறுதிச் சரணாகதியாய் அரசுமருத்துவமனைக்குச் சென்றபொழுதுதான் டி.பி. முற்றிவிட்டது தெரிந்தது.  இருமியபடியே  தன்மகன் கதிரவனை எழுப்பினார், கதிரவன் எழுந்தான்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!



வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!







                            திருக்குவளையில் கலைஞர் மு. கருணாநிதி  ஆகியநீர் கருவாகி,  திருவாரூரில்  உருவாகி, ஈரோட்டில் மெருகாகி,  காஞ்சியில் திருவாகி, வள்ளுவத்தில் தருவாகி, வாழும் வரலாறே! 

                        ‘ தமிழர்களின் சமயம் வள்ளுவர் சமயமே;   அவர்களின் நெறிநூல் திருக்குறளே!’  என்று உரைத்த பெரியாரின் பள்ளியில் பிள்ளையாய், சென்னையிலே வள்ளுவருக்குச் சிலைவைத்த பேரறிஞர்  அண்ணாவின் பல்கலைக்கழகத்தில் தம்பியாய்த் தரணியில் உலாவரும் தமிழ்க்களஞ்சியமே!

                        ஈ.வே.ரா.-வும் அண்ணாவும் உனதிரு கண்கள் என்றால்;   வள்ளுவர் உனக்கு மெய்யாகும் என்பது உனது செயப்படுபொருள்களால் மெய்யாகும்.  

                         இருநூற்றாண்டுகள் சங்கமிக்கும் 1.1.2000-த்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் கல்லிலேயே சிலை வைத்திட்டாய்.   பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து 
நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2015

நீங்க பார்க்காத குறத்தி...! -சிற்றிலக்கியம்...1.




நீங்க பார்க்காத குறத்தி...!




      ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இருக்காது.  தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பிரபலமான குழுக்கள் இன்னமும் இருந்துகொண்டு ஆடிவருகிறார்கள்.

                       குறவன் குறத்தி ஆட்டம் என்றால் பாட்டுப் பாடிக்கொண்டே, அவர்கள் ஆடுவதைப் பார்ப்பதே ஓர் அழகுதான்.

                      சிற்றிலக்கிய (96) வகைகளில்  குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வதுகுறவஞ்சி என்ற இலக்கிய வகை ஆகும்.
  
          இப்பொழுது இருக்கும் குறவன் குறத்திகள் ஊர்களில் நையாண்டி மேளத்துடன் ஆடிப்பாடி கதகைகளைக் கூறி மக்களை மகிழ்விக்கிறார்கள். 

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5




விதி விலக்கு




            விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்...மிகாமலும்...உறழ்ந்தும்... அமையும் இடங்கள் பார்ப்போமா?



                                           வீதி விளக்கு பாத்திருக்கின்றோம்... விதி விலக்கெல்லாம் சொன்னாத்தானே தெரியும் என்பதுநீங்கள் சொல்வது கேட்கிறது.

                                                                                                                                                                                                                                 சிறப்பு விதி   
                                    
எழுவாய்த் தொடர்:  

எழுவாயாக நிற்கும் பெயர், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது.  ( எ.டு)  பாரதிதாசன் பாடினார்.



எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது என்பது விதி.  ஆனால்
எழுவாய்த் தொடரானாலும் நிலைமாழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழிமுன் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

     தீ சிறியது  =   தீச் சிறியது
     நா +குழறியது = நாக் குழறியது
    
 (குறில் நெடிலுக்குப் பின் மிகும்)
      இரா  +  பகல் இராப் பகல்        

      நிலா +   காண் நிலாக் காண்

                   
      ஆமா(காட்டுப் பசு)  +   துரத்தினான்=  
ஆமாத் துரத்தினான்         
                                         (இரு நெடில்களின் பின் மிகும்)


      திணை சிறியது = திணைச் சிறியது ; திணை சிறியது.
          (குறில் இணைச் சொல் வல்லினம் மிகுந்தும் – மிகாமலும் வரும்)


      சுடு  + சிறிது = சுடுச் சிறிது
      விள + தீது    விளத் தீது (சுடு, விள- சொற்களுக்குப் பின் மிகும்)  
Related Posts Plugin for WordPress, Blogger...