சனி, 14 மே, 2016

புதிய உடன்படிக்கை - 5 நாடகம்


புதிய உடன்படிக்கை

 

காட்சி-5

 

இடம்:  கனகராஜ் வீடு

 

பாத்திரங்கள்: ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.

 

(எல்லோரும் அமர்ந்திருக்க, ஜான்சன் மட்டும் நின்றுகொண்டு ஏதோ சிந்தனையில் இருக்கிறான்)

                                                                        

கனகராஜ்: என்னடா ஜான்சன்... ஏன் வீட்டுக்கு வந்த்துல இருநது நானும் பாக்கிறேன்... ரொம்ப டல்லா இருக்கியே...
செல்வம்: புது மாப்பிளைன்னா சும்மாவா போச்சு... விடிய விடிய கண்ணு முழிச்சிருப்பாரு...
சேகர்: அதான்... கண்ணு செவந்திருக்கா...?  ஆமாம்மா... ரொம்ப டயடாத்தான் இருக்கும்...
கனகராஜ்: ஓகோ... அப்படீங்கிறியா...?
சேகர்: ஆமாங்கிறேன்... நேத்தைக்குப் பாத்ததுக்கு இன்னைக்கு இளச்சு போயிட்டான் பாரு...
ஜான்சன்: டே...! கடுப்ப தூண்டாதிங்கடா... அவ அவன்... நொந்து போயி இருக்கான்...
சேகர்:  மச்சி... ரொம்ப வொரில்ல இருக்கான் போல இருக்கு... ஏ மச்சி வீட்ல ஏதும் பிரச்சனையா...?
ஜான்சன்: டே... நீ சொன்ன மாதிரியே... ஏடாகூடமா ஆயிடுச்சு...
கனகராஜ்: என்னடா ஆயிடுச்சு...
ஜான்சன்: அதை எப்புட்டி சொல்றது...?
செல்வம்: வாயிலதான்டா...
ஜான்சன்:இந்த நக்கல்தானே வேணாங்கிறது...
செல்வம்: ‘துன்பம் வரும் வேலையில சிரிங்கன்னுசொல்லி வச்சான்... வள்ளுவனும் சரிங்க...(பாடுகிறான்)
கனகராஜ்: விவஸ்த கெட்ட ஆளுடா... மச்சி! அவன் கெடக்கிறான்... என்னா நடந்திச்சின்னு நீ சொல்லு...
ஜான்சன்: குடிச்சிட்டு போனேனா...? போயி பக்கத்துல நெருங்கிறதுக்குள்ள  எப்படியோ கண்டு புடுச்சிட்டாள்...
செல்வம்: அதுக்குத்தான் அப்பவே சொன்னே... கொஞ்சமா குடிடான்னு...
ஜான்சன்: நீ ஒன்னும் அப்படி சொல்லலைடா...



செல்வம்: நீ போதையில மறந்திருப்பா...
கனகராஜ்: அப்புறம் என்ன ஆச்சு...?
ஜான்சன்: அப்புறமென்ன ‘டோன்ட் டச்ன்ட்டா...!
கனகராஜ்: நீ என்னடா சொன்னாய்...?
ஜான்சன்:  நா என்னடா சொல்றது...?
சேகர்: ஆமா... ஒ வொய்ப் இங்கிலீஸ்லய்யா சொன்னாங்க...
ஜான்சன்டே...!  சீரியஸான மேட்டர்டா... ‘பஸ்ட் நைட்’லயே... இப்படி ஆகிப் போச்சேன்னு சொல்றேன்... ஒங்க லைப்ல இப்படி நடந்திருந்தா... சிந்திச்சு பாருங்கடா...
சேகர்: சிந்திச்சு பாருடா...
செல்வம்: நீ சிந்திச்சு பாருடா... (யோசிக்கிறான்)
கனகராஜ்: சும்மா சிந்திச்சா... சிந்தனையே வரமாட்டேங்கிதே...
செலவம்: சிந்திச்சா... ஒரே துக்கம்தான்... துக்கம் தாளலல்ல... கவலைய மறந்து துக்கத்தைக் கொண்டாடுவோம்... டே...! ஜான்சன்... பிராந்தியடிப்போம்... பிரச்சனைய மறப்போம்...
சேகர்: டே...  செல்வம்...! வீட்ல இதுனாலதான் பிரச்சனையே...!
கனகராஜ்: சேகர்... ஒனக்கு ஒரு பழமொழி தெரியுமா...? முள்ள முள்ளாலதான் எடுக்கனும்... தெரியுமா...?
செல்வம்:  அட... இதக்குப் போயி கவலைப்பட்டுக்கிட்டு... அந்தக் காலத்துல... கல்யாணம் ஆனதுக்கு பிறகும்... பத்து மாசமாக்கூட புருசனை பக்கத்தில விடாதவங்க இருக்காங்க... இது மாதிரி கதைய நெறையா கேள்விப்பட்டு இருக்கேன்... தெரியுமா...?
சேகர்:  எப்பவும்... எதுக்கும் கவலைப்படக் கூடாதுடா... என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு... தைரியமா... ஆம்பளை மாதிரி இருடா...
செல்வம்:  இப்பவே பொண்டாட்டி பேச்சக் கேக்க ஆரம்பிச்சா... அவ்வளவுதான்...
கனகராஜ்: ஆம்பிளை ஆயிரம் தப்பு செஞ்சாலும்... அட்சஸ் பண்ணிப்போற பொம்பளையா இருக்கனும்... இப்ப என்ன எடுத்துக்கவே... நா என்ன குடிக்காமயா இருக்கேன்... இது நாள் வரை எ பொண்டாட்டி ஒரு வார்த்தை கேட்டு இருப்பாளா...?
செல்வம்: அதானே... அண்ணி தங்கமானவங்க... வாய் பேசமாட்டாங்களே...!
சேகர்: எனக்குக்கூட ரொம்ப நாளா சந்தேகம்... ஊமையோன்னு...!
கனகராஜ்: டே...! சேகர் இதானே வேணாங்கிறது... அப்படி ஒரு கட்டுப்பாடா வச்சிருக்கேன்...
சேகர்:  ஓகோ... இதுதான் குடும்பக் கட்டுப்பாடோ...?
கனகராஜ்:  அவளக் கூப்புடுறேன்... நேராக் கேளுங்கப்பா... ஏய்... செங்கமலம்...
ஜான்சன்:  நீ போட்ட சத்தம் எங்களுக்கே கேக்கல... நீ சொல்றதுல்ல நம்பிக்கை இருக்குடா...
செல்வம்:  நீங்க கூப்பிட்ட... உடனையே ஓடியாந்துட்டாங்க பாரு         (கிண்டலாகச் சிரிக்கிறான்)
கனகராஜ்:  எ சத்தம் கேட்டிருக்காது... இல்லைன்னா ஓடியாந்திருப்பா தெரியுமுல்ல...
ஜான்சன்:  சரி... வாங்க பாருக்கு போயி... பிராந்தி அடிப்போம்...!
கனகராஜ்:  இப்ப சொன்னியே இதுதான் சரி... வாங்க சீக்கிரம் பாருக்குப் போவோம்... ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு...!
(அனைவரும் புறப்படுகின்றனர்)
                                                                                                                     
                     





                                                    -தொடரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

8 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தொடரைத் தொய்வின்றி எழுதுகின்றீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள முனைவர் அய்யா,

      தங்களின் ஊக்குவித்தலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மறுபடியும் பாருக்கா... ?
    த.ம.வ.போ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      மீண்டும் முதலில் இருந்து... தங்களின் வாக்கிற்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  4. குடிச்சவர் பாடு இப்படித் தான்
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...