செவ்வாய், 10 மே, 2016

புதிய உடன்படிக்கை – 4 -நாடகம்





காட்சி-4
இடம்மாளிகை
பாத்திரங்கள்:  ஜான்சன், ஜாக்லின் சித்ரா, ஆரோக்கிசாமி.

(ஜாக்லின் சித்ரா, பூக்களால் தோரணம் கட்டி  அலங்கலிங்கப்பட்ட கட்டிலின்மீது உட்கார்ந்து முலங்காலின் முட்டியில் முகத்தை வைத்து, ஜன்னல் வழியே வானத்தில் தெரியும் முழு நிலைவைப் பார்த்துக் கொண்டே  கலக்கத்துடன் கணவன் ஜான்சன் வரவுக்காக காத்திருக்கிறாள்...)


ஜாக்லின்:  (பின் குரலில் மனசாட்சி)  இன்னும் அவரைக் காணோமே... புதுமாப்பிளை... முதல் இரவுன்னுகூட இல்லாம... இன்னும் என்ன பேச்சு... கொஞ்சம்கூட இங்கீதம் தெரியாத நண்பர்களா இருப்பாங்க போல இருக்கே... மணி பன்னிரண்டாகப் போவுது... ஒரு வேளை நம்மைப் பிடிக்கலையோ...?  எந்த விதத்தில கொறஞ்சு போயிட்டோம்... அழகில்லையா...?   வரட்டும்... வரட்டும்... அய்யோ... வந்ததும் வாராததுமா ஏதாவது கேட்டு கோவிச்சிக்கப் போறாரு... இல்லல்ல... என்னைப் பிடிக்கலைன்ன கல்யாணம் பண்ணியிருப்பாரா... கல்யாணத்துக்க ஏதாவது கொடுக்கல்... வாங்கல்... வேலையா இருக்கும்... ம்...ம்... வர்றப்ப வரட்டும்...!
(பெருமூச்சு விடுகிறாள்)

ஆரோக்கியசாமி:  (உள்ளே வந்து கொண்டே)  என்னம்மா... இன்னும் அவன் வரலை...?

ஜாக்லின்:  வரலைங்க மாமா...

ஆரோக்கியசாமி: நீ பயப்படாதம்மா... அவன் வந்திடுவான்... பொறுப்பில்லாம... பயலுகளோட சேந்துக்கிட்டு பொறிக்கித்தனமா... நானும் வருவான், வருவான்னு பார்த்தேன்... கல்யாண வேலையில ரொம்ப அசதியா இருக்கும்மா... தூக்கம் வருது... மொட்ட மாடியில போயி படுக்கிறேம்மா... கதவை சாத்திக்க...

ஜாக்லின்: சரிங்க மாமா...

(மாமனார் மாடிக்குச் செல்கிறார். மீண்டும் கட்டிலில் அமர்ந்து காத்திருக்கிறாள்... சிறிது நேரத்திற்குப் பிறகு ஹாலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்கிறது... கதவைத் திறக்கிறாள்)

ஜான்சன்: (உள்ளே நுழைகிறான்) இன்நேரம் தூங்கி இருப்பான்னு நெனச்சேன்... தூங்கலையா...?

ஜாக்லின்: இல்ல...

ஜான்சன்: இல்ல... தூக்கம் வரலையா...?

ஜாக்லின்: எப்படிங்க வரும்... போயி எவ்வளவு நேரமாச்சு... ஏங்க இவ்வளவு நேரம்?

ஜான்சன்: ஸ்சு...ஸ்சு... சத்தம் போடாதே... அப்பா காதில விழுந்திடப் போவுது...

ஜாக்லின்: ஒங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது... பாத்து... பாத்து கண்ணே பூத்துப் போச்சு...

ஜான்சன்:  போன எடத்துல கொஞ்சம் நேரமாயிடுச்சு...

ஜாக்லின்: சரி... (பிளாஸ்க்கில் இருந்து பாலை டம்ளரில் ஊற்றி) இந்தாங்க பால்...

ஜான்சன்: அய்யய்யோ... பாலா... எனக்கு வேண்டாம்... நீ குடிச்சிடு...

ஜாக்லின்: நீங்க குடிச்சிட்டு குடுங்க...

ஜான்சன்: எனக்கு ஆடையில்லாத பால்தான் பிடிக்கும்...  வேற ஏதாவது காட்டமா... இருந்தா குடு...

ஜாக்லின்: காட்டமாவா...?  என்ன்னங்க... எனக்கு ஒன்னும் புரியலைங்க...
ஜான்சன்: இல்ல... என்னிட்ட பாலக் காட்டாம குடுச்சிடுன்னு சொன்னே... அப்புறம் கப்புன்னு எறங்கிடும்...

ஜாக்லின்: கப்புன்னு எறங்கிடுமா...?  எதுங்க...

ஜான்சன்: இல்ல... பாலக் குடிச்சா... கப்புன்னு உள்ள இறங்கிடுமுன்னு சொன்னே...

ஜாக்லின்: சரி எனக்கும் வேண்டாம்...(டம்ளரை மேஜைமீது வைத்துவிட்டு, அவன் அருகில் வந்து காலில் விழுகிறாள்.  அவள் எழுந்திருக்கத் தோளைத் தொட்டுத் தூக்குகிறான்... அவனின் பிடியிலிந்து ஜாக்லின் தன்னை விலக்கிக் கொள்கிறாள்)
 வ்வா...வ்வா...(வாந்தி எடுப்பதைப் போலக் குமட்டுகிறாள்)  என்னங்க கெட்ட வாடையடிக்கிது... வாந்தி வர்ற மாதிரி இருக்குங்க... வ்வா...

ஜான்சன்: ஒன்னுமில்லையே... பக்கத்தில சாக்கடை ஓடுது...

ஜாக்லின்: சாக்கடை நாத்தம் தெரியாதாங்க... கோவிச்சுக்காதிங்க... குடிக்கிற பழக்கம் உண்டா...?

ஜான்சன்:  ம்... ம்... (கன்னத்தில் கைவைத்து யோசிக்கிறான்)

ஜாக்லின்: என்னங்க யோசிக்கிறீங்க...

ஜான்சன்இல்ல... இவ்வளவு கரைட்டா எப்படிக் கண்டு புடுச்சேன்னு யோசிக்கிறேன்...

ஜாகலின்: (அதிர்ச்சியுடன்) என்ன குடிக்கிற பழக்கம் உண்டா...?

ஜான்சன்: ஆமாம் உண்டு... அதுக்கு என்ன பண்ணணுங்கிறாய்...?

ஜாக்லின்: அய்யோ ஜீசஸ்...! நா என் பண்ணுவேன்... சாராயம் குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?

ஜான்சன்: அடிப்போடி பைத்தியக்காரி... சாராயம் குடிப்போனா...?  சீ.... பிராந்திடி... ஒரிஜினல் பிராந்தி...!

ஜாக்லின்: எந்த சனியனா இருந்தா என்ன...?   எல்லாம் ஒன்னுதானே...!

ஜான்சன்: ஒனக்கு ஒன்னுமே தெரியலை... குதிரையும் கழுதையும் ஒன்னா...?

ஜாக்லின்: அந்த விளக்கமெல்லாம் ஒன்னும் வேண்டாம்...

ஜான்சன்: கண்ணு ஒனக்கு விளக்கம் வேணாம்... எனக்கு இந்த விளக்கு வேணாம்... (ஜாக்லினை அணைக்க நெருங்குகிறான்... அவள் விலகுகிறாள்)  வாம்மா... வாம்மாங்கிறேன்... எ கணுணுல்ல... வாடா... ஏய்... வாங்கிறேன்லே... அடச் சீ வாடீன்னா...

ஜாக்லின்: குடிச்சிட்டு என்னிட்ட நெருங்காதிங்க... ஒங்கள கையெடுத்துக் கம்பிடுறேன்... நெருங்கி வராதீங்க...

ஜான்சன்: வந்தா...?

ஜாக்லின்: இது என்னங்க கேள்வி...? பிளீல் வராதீங்க...!

ஜான்சன்: (நடக்கும் போதே கல்கள் பின்ன... கட்டிலில் உட்காருகிறான்)  அடிப்போடி..  என்னால நிக்க முடியல... படுக்கிறேன்... எதாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்.  (படுத்த ஜான்சன் தூங்க, அருகில் இருந்த பானையில் நீரை எடுத்துக் ஜாக்லின் குடித்துவிட்டு அழுது கொண்டே இருக்கிறாள்.)  
                                                      
            


                                                     -தொடரும்...
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.












8 கருத்துகள்:

  1. கிக்கான முதல் ராத்திரிதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      சொர்க்கத்தின் திறப்புவிழா புது சோலைக்கு வசந்த விழா
      பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா
      பார்க்கட்டும் இன்ப உலா...

      தாங்கள் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் உள்ளக் குமுறலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முதல்நாளே இப்படியா ? விளங்காதவனாக இருப்பானோ... ? ஜான்ஸன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      மதுவின் பிடியில் மானிடமே மண்டியிட்டு மயங்கிக் கிடக்கிறதே...! வாககிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    தாங்கள் தொடர்வதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...