புதன், 30 செப்டம்பர், 2015

கணினியில் தமிழ் வளர்ச்சி

இணையத் தமிழை எளிதாக்குவோம்!

கணினி:
               மனிதனின் மூளையால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி,  மூளையையும் விஞ்சி விட்டது.  1983 ஆம் ஆண்டு்த்  தமிழ்க் கணினி வல்லுநர்கள் ,  தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.  “தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவும் வகை  செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை   இன்று ‘கணினி’  நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்றால்  அது  மிகையில்லை.
தமிழில் மென்பொருள்:
                சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்,  கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி  கிடையாது.     தமிழ் எழுத்துருக்கவிசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை.  தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து,  அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது
               1984ஆம் ஆண்டு   கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் தமிழில் முதலில் மென்பொருட்களில்  ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) உருவாக்கப்பட்டது.  இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக ‘ஆதவின்’ என்ற மென்பொருளும் MS  Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாகப்  பின்னாளில் உருவாக்கம் பெற்றது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பெண்கள் முன்னேற்றம்

நீ பாதி... நான் பாதி...!

பெண்கள்:
               அகிலத்தில் அன்று முதல் இன்று வரை காலங்காலமாக ஆணாதிக்கச் சமூகத்தில்தான் பெண்கள் வாழவேண்டிய அவலநிலை இருக்கின்றது என்பதே நிதர்சனம்.  ஆணுக்கம் பெண்ணுக்கும் சில உறுப்புகளால் வேறுபாடு இருந்தாலும் அவர்களின் அறிவுஆற்றல்பெருமைகளில்  எந்த வேறுபாடு இல்லை.
சமூகத்தில் பெண் குழந்தை:
               நம்நாட்டில்  பெண் குழந்தை பிறந்தது என்றால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது.  இவளைத் திருமணம் செய்து கொடுக்கப்  பெரிய தொகை செலவு செய்ய வேண்டி வருமே என்ற கவலையும் பெற்றோருக்கு அந்தப் பெண் குழந்தையுடன் சேர்ந்து பிறக்கிறது.  பெண் குழந்தை பிறந்தவுடனே கள்ளிப்பாலை  அதன் வாயில் ஊற்றிக் கொல்லும் கொடுமை தமிழ்நாட்டில்தானே நடந்தது.  இதுபோன்ற அவலங்களைத் தடுப்பதற்காகத்தானே அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தை’ த் தொடங்கியது.  இந்தத் திட்டத்தில் வளர்ந்த  குழந்தைகளில் அதிகம் பெண் குழந்தைகள்தான்.  

திங்கள், 28 செப்டம்பர், 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

புகையும் மதுவும் விலக்கு... விலக்கு...!
சுற்றுச்சூழல்:
சுற்றுச்சூழல் என்றால் நிலம்நீர்காற்றுஆகாயம்நெருப்பு ஆகிய ஐம்பூதங்களான புவி மண்டலம் சீராக இயங்குவதற்கும் இவற்றிற்குப் பாதிப்பு நிகழாமல் பாதுகாப்பதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.    ஆனால் மனிதனை மற்றும் மனித  வளங்களைப்  பாதுகாப்பதும்   சுற்றுச்சூழல் பாதுகாப்புதான்  என்பதை நாம் ஏனோ இன்னும் அறியாமல் இருக்கின்றோம்!
மனிதர்கள் அனைவரும் உடல்நலத்தோடும் வளத்தோடும் வாழவே விரும்புகிறார்கள்.  ஆனால் சுற்றுப்புறச் சூழல் அவர்களை அவ்வாறு வாழ அனுமதிக்கின்றதா என்ற வினாவிற்கு ‘இல்லை என்பதுதான் பதிலாக வருகிறது.   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் புகைபிடித்தல் மற்றும் மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகி உருக்குலைந்து வருகின்றது மனித சமூகம்.

சனி, 26 செப்டம்பர், 2015

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை



பாரில் பாரதத்தின் பண்பாடு போலில்லை...!

                                                                                                                   
                                                                                 
             







நாகரிகப்பண்புத் தொட்டிலைத்

தாலாட்டாமல் பண்பாட்டிற்கு

முகாரி பாடும் மூடர் கூடமே!

முன்னேறிய உலகில்-

பின்தங்கி விட்டனவே

வாழ்க்கை நெறிமுறை விழுமியங்கள்!

வியாழன், 24 செப்டம்பர், 2015

இளைய சமூகத்திற்கு நம்பிக்கை


கணினிப் படை வருக!

                             


உச்ச  மலைவிலகி  ஓடு  சிறுபரலாய்
   உள்ள  ஒளியணைந்த  ஓட்டை  இருட்குடமாய்
அச்சப்  புழுவதட்ட  ஆண்மை   இழகளிறாய்
   அட்டை   அறிவுறிஞ்ச ஆனவுன்  கோலமென்ன?
மெச்சு  மினத்திரளே! மிஞ்சு  தமிழ்ப்புலமே!
   மேடை  நடிகரிடை மேன்மை   இழந்தவனே!
எச்ச  இனக்குறியே  ஏடுகள்   பாடியஉன்
   ஏற்ற  சரித்திரத்தோ  எச்சில்  உமிழுகிறாய்?

வியாழன், 17 செப்டம்பர், 2015

இந்த வினாக்களுக்கு மட்டும் விடை தெரியவேயில்லை...!

                                                     

எங்கள் பெரியார்

       
                     

                       கவிமதியின் கவிதை வரிகள்....



மூடிமறைத்துப்  பேச
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்
நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த
கரியார்
எளிதாய்க் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார்                                                                                         தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்

உலகத் தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்குத்  தெளிவான
ஒலியார்
தேடிப் படிக்கச் சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
-நன்றி: கவிமதி.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

அண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...!






அண்ணா... நீர் பெரியார்!




அண்ணா-
காஞ்சியில்
காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்...!
அரசியல்...
அரிச்சுவடியைக் கற்றுத் தந்தாய்...!


தமிழனின்-
கிழிந்து கிடந்த மானத்தைத்
தன்மானத் தறிபூட்டி...                    
வெகுமானப் பட்டாடை
நெய்துகொடுத்த நெசவாளன்!

சனி, 5 செப்டம்பர், 2015

ஆசிரியர் தினத்தில் வாழ்த்து!




ஆசிரியருக்கு வாழ்த்து!
                                                                  

                                                                        



                                         ஆசிரியர்                                     


                                                                                                                                   
ஆசு இரிதலால் ஆசிரியர் ஆகியே

மாசு மருவற்ற மாணக்கர் ஆக்கியதால்

பேசுகின்ற தெய்வமாய்ப் பேற்றினைப் பெற்றிட்டு

வீசுகின்றாய் கல்வியெனும் காற்று. 


‘சர்வபள்ளி’  இராதகிருஷ்ணன்!




இந்தியநாட்டின்-
இரண்டாவது குடியரசுத்தலைவர்...
இரண்டுமுறை குடியரசுத் துணைத்தலைவர்!
சுரண்டிய வெள்ளையனைத்  தன்  பேச்சால்                     
மிரண்டு போக  வைத்தவர்.


Related Posts Plugin for WordPress, Blogger...