வியாழன், 30 ஜூலை, 2015

அப்துல் கலாம் காலமானாரென்று யார் சொன்னது?!



கலாம் - காலம்... ! காலமானாரா...?!







மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் (2002 ஜுலை 25-ஆம் தேதி நாட்டின் 11-ஆவது  குடியரசு முன்னாள் தலைவர் 
 அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பொழுது மாணவர் மத்தியில் மாரடைப்பால் காலமானார்.


அய்யா அப்துல் கலாமின் நூலகம்




கலாம் எழுதிய புத்தகங்கள்

  1. Turning Points; A journey through challenges 2012
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
  4. Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
  6. Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.

கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்

  1. Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ் சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.
  2. ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ பீ ஜே அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.
  3. A. P. J. Abdul Kalam: The Visionary of India கே பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.
  4. பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.
  5. The Kalam Effect: My Years with the President பீ எம் நாயர் ; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.
  6. Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.

தன் சிகை அலங்காரத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை.  இதை மாற்றிக் கொள்ளும்படி பலரும் கூறிய பின்பும் அவர்களிடம் அன்பாக மறுத்த விட்டார் கலாம்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவரான அப்துல் கலாம் சைவ உணவையே உட்கொண்டார்.  காரணம் திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த பொழுது ஹாஸ்டலில் சைவ உணவிற்கு கட்டணம் ரூபாய் 14 , அசைவ உணவிற்கு ரூபாய் 18 .  கலாமின் தந்தை வறுமையின் காரணமாக சைவ உணவைச்  சாப்பிடச்சொன்னதாக,  கலாமே குடியரசுத்தலைவராக பதவியேற்பதற்கு முன்னால் தன்னிலையை நண்பரிடம் விளக்கிக் கூறியிருக்கிறார்.

பொருளாதார சமநிலை இல்லாததால் உலகில் வன்முறை ஏற்படக் காரணம்.

திருக்குறள் 100 குறளுக்கு மட்டும் அப்துல் கலாம் விளக்கம் எழுதி இருக்கிறார்.  அதை அவசியம் நூலாக வெளியிட வேண்டும் என்பது ஆவலாக  இருந்திருக்கிறது.


                                               அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர்...

விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.

400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘நேரம்’ என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சசி.  அது ஒரு வானிவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை”- என்று சொன்னவர் அப்துல் கலாம்.  எப்போதுமே அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்!


“கனவு என்பது உங்கள் தூக்கத்தில்  வருவது அல்ல...
உங்களைத் தூங்கவிடாமல் செய்வது”

                                    போகலமோ கலாம்?

படகோட்டி  யின்மகனே!  பாரதவிஞ்  ஞான
உடலாகிப்  போனவனே!  ஓய்ந்தாய்!  -  நடமாடா
தூங்காக்  கனவுகளில்  தூளியெமை  இட்டுவிட்டு
நீபோக  லமோ  கலாம்?



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



                           கலைஞர் இரங்கல்



கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து 
மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;
மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்
மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று! 
அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல் 
அமைதிகாக்கும் கேடயமாய் ஆவதற்கும் 
ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை 
அண்டைநாட்டுத் தூதராக மாறுதற்கும் 
மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு 
மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும். 
அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே 
அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே 
அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து 
அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும். 


இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும் உரிய அப்துல் கலாம் அவர்களை இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.































கலங்கரை விளக்கம் சாய்ந்ததது

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
                                           
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.

1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர் .





திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு படித்தபோது சக மாணவர்கள், பேராசிரியர்களுடன் அப்துல் கலாம் எடுத்துக்கொண்ட புகைப்படம்.   இதில் சிவப்பு  வட்டமிட்டவர் அப்துல் கலாம்.(அக்டோபர் 151931 - ஜூலை 272015) மேல் வரிசையில் வட்டமிட்டு காட்டப்பட்டவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா (எஸ். ரங்கராஜன் மே 31935 - பெப்ரவரி 272008)



அறிவியல் ஹீரோ

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.




உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.

ஏவுகணை அவசியம்

‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமையின் சிகரம்

ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.
ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி.

இசைப்பதும் ரசிப்பதும்
                                      
உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.

வாருங்கள் இளையோரே

‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.

நிறைவேறாத கனவு

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.

அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
நன்றி.
எஸ்.முகமது ராஃபி
தி இந்து 28.7.2015















‘இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்’
இந்தியா வல்லரசாகும் காலம் வரும்...
கலாமே...!
உன் கனவு நனவாகும் 2020 களில்...
உன்னையே எண்ணியே வாழ்கிறோம்...!




-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.

20 கருத்துகள்:

  1. 100 குறளுக்கான நூலை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

    அற்புதமான தொகுப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      அவர் 100 குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதியிருக்கிறார். எப்படி கலைஞரின் குறளோவியம் போல விரிவாக எழுதியிருக்கிறரா? அல்லது மு,வ, உரைபோல.,,,பரிமேலழகர் உரைபோல எழுதியிருக்கிறாரா...? தெரியவில்லை.... ஆனால் எல்லா குறளுக்கும் எழுதி வெளியிட அவருக்கு விருப்பம் இல்லை... குறிப்பிட்ட 100 குறளுக்கு விளக்கம் எழுதியிருக்கிறார்,,, அதை வெளியிட மனிதநேயமிக்க மாமனிதர் அப்துல கலாம் பெரிதும் விரும்பினார்- என்று அவரின் உதவியாளர் தொலைக்காட்சி பேட்டியின்போது குறிப்பிட்டார்.

      ‘முப்பால்’ பிரியரான தாங்கள் இப்பால் எதிர்பார்ப்பது இயல்புதான். விரைவில் நூல் வெளிவரும் நானும் எதிர்பார்க்கிறேன்.
      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. கலாமுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள விதம் நன்று. காலமாகவில்லை. நம்முள் கலந்துவிட்டார்.
    கலாமைப்பற்றி வெளிநாட்டுப்பத்திரிக்கைகளில் வந்த செய்தியைக் காண வாருங்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_12.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கு நெஞ்சார்நத நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் ஐயா.

    நினைவில் வாழும் கலாம் பற்றிய வாடாக் கதம்பம்.

    அறியத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மக்கள் மனதை என்றும் ஆள்வார்...வாழ்வார்...வாக்கு பொய்க்காது.

      நன்றி.

      நீக்கு
  4. #அப்துல் கலாம் காலமானாரென்று யார் சொன்னது?!#
    சொன்னவர்கள் ,இந்த செய்தி உண்மையல்ல ,கனாதான் என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்து இருக்கலாம் .அய்யகோ ,உண்மையாகிவிட்டதே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      அய்யகோ! இந்த செய்தி கனவாக இல்லாமல் உண்மையானதே!
      தன்னலமில்லா தலைவனுக்குத் தலைவணக்கம்...!

      நீக்கு
  5. டாக்டர் A.P.J. அப்துல் கலாம் நினைவுகளைப் போற்றி ஒரு தொகுப்புரையை, சிறந்த முறையில் தந்தமைக்கு நன்றி.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் அய்யா,
    தங்கள் பகிர்வு அருமை,
    அவரின் நினைவினைப் போற்றுவோம்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      வணக்கம். தங்களின் பாராட்டுதலுக்கும் தாங்கள் கூறுவது போல அவரின் நினைவினைப் போற்றுவோம்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  7. உடல் நலமற்ற நிலையிலும் தங்கள் தொகுப்பு அருமையாக உள்ளது! வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாழ்த்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  8. கலாம் ஐயா பற்றிய இத்தொகுப்பு முழுமையாக உள்ளது
    வலைபக்க ஆசிரியருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் சீரிய கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம்

    அந்த மாமனிதர் விதைத்த லட்சிய கனவு விதைகளை நினைவாக்க நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும்.

    நன்றி

    ( இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் ! )

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      அப்துல்கலாம் புதைக்கப்படவில்லை,... இளைஞர் மனங்களிவ் விதைக்கப்பட்டிருக்கிறார்.
      இந்தியா வல்லரசாகி விருட்டசமாகும்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  10. கலாம் அவர்களின் குறள் விளக்கம் காண வேண்டும். அவர் மறையவில்லை...நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் இன்னும்...அவரது கனவுகள் இருக்கின்றனவே அதை நனவாக்க முயல்வோம்...அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை!

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    கலாம் அவர்களின் கனவு 2020 -இல் நனவாக இளைஞர்கள் இணைந்து இந்தியாவில் நனவாக்கப் பாடுபடவேண்டும்.

    -மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...