திங்கள், 20 ஏப்ரல், 2015

பெரியாரைச் செருப்பால் அடித்தாயே!



அவர்தான் பெரியார்...!










செருப்பால் அடித்தாயே...!
உன் தாயிடம் கேள்...
உனக்குத் தந்தை யாரென்று...?
யாரென்று தெரியவில்லையென்றால்
அவர்தான் பெரியார்...!


வாழும்போதே...
வண்டியில் போகும்போதே
அவர்படாத செருப்படியா...?

அடியே!  அடி...!
 உனக்காக உழைத்தவர் அவர்தான்...
உனக்குத் தெரியாது...!
அவர்...
வாழும்போது -நீ
வாழ்ந்திருக்க மாட்டாய்...!
அடியே!  அடி...!


பெண்கள் உருப்படியாக-
தேவதாசிமுறையை 
ஒழிக்கப்  பாடுபட்டவருக்குச் செருப்படியா?
அவர் பட்டபாட்டிற்கு...
இன்னும் பலன் கிடைக்கவில்லை!
அடியே!  அடி...!
                                                                   






மூத்திரப்பையை இடுப்பில் கட்டிக்கொண்டு
மூடச்சாத்திரங்களை
மூடச்செய்யப்
பகுத்தறிவு விளக்கேந்தி
பாரெங்கும்  96 வயதிலும்
பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றிப்
போராடிய வீரனுக்கு...
வீனர்களின் விபரீதம்...!
 நீர்  பார்த்தீரா....?

இவர்களுக்காகத்தானே...
இடஒதுக்கீடு கேட்டாய்...!
இவர்கள் ஒதுங்க இடம் கொடுத்தவனுக்கு...
இவர்கள் ஒதுங்கும் இடம் பார்த்தீரா...?

நாய்கள்கூட-
தன்காலில் படாமல்
நாகரிகமாகச்  சிறுநீர்கழிக்கும்  பார்த்தீரா...?

தந்தை பெரியார்...
நாய்கள் பதினைந்துக்கும் மேல் வளர்த்தாராம்...!
அந்த நாய்கள்...
அவர்   பயணிக்கும்  வண்டியில் பயணிக்கும்...
அரங்கத்தின் கீழே அமர்ந்திருக்கும்...
அந்த நாய்கள்...
நன்றியுள்ள நாய்கள்...!





ஒரு சமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோலக் கார் வைத்துக்கொள்ளாத காலம் அது, இருட்டு அதிகம் இருந்த இடத்திலிருந்து ஒருவன் என் மீது செருப்பினை வீசினான்; அது எனது ரிக்‌ஷா வின் முன் விழுந்தது. அதனை எடுக்கச்சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது. செருப்பு நல்லதாக இருக்கின்றது; ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்! திருப்பிவிடு அந்த இடத்திற்கு இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிக்‌ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்‌ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த இடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான். மிக்க நன்றி! இரண்டு செருப்பையும் வீசியமைக்கு என்று சொல்லிவிட்டு ஜாகைக்குத் திரும்பினேன்.” (விடுதலை-24.03.1973) 


பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி மட்டும் அல்ல ஒரு போராளி ,ஆம்

 மூத்திரப் பையை இடுப்பில் கட்டிக் கொண்டு 96 வயது வரை 

பகுத்தறிவைப்  பிரச்சாரம் செய்த ஒரு போராளி !



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.


40 கருத்துகள்:

  1. கேடு கெட்ட ஜென்மங்கள் இவள்களுக்கு தெரியுமா ? பெரியார் யாரென ? இவள்களின் வயதென்ன ? சரித்திரம் தெரியும் இவள்களுக்கு மரியாதை என்றால் என்னவென்று தெரியாத மூடச்சிறுக்கிகள் இன்று பெண்கள் ஓரளவு தைரியமாக வெளியில் பேச்சுரிமை பெற்றதற்க்கான அடிப்படை காரணம் தெரியுமா ? அறிய மடந்தைகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஜி,

    அறியா மடந்தைகள்...

    அறிவில்லா மாக்கள்...

    தெரியாமல் செய்கிறார்களா...?

    பெரியாரே...

    சிறியாரை...

    மன்னிப்பீராக...!

    சவுக்கடி தந்த ஜி...

    சுரனையுள்ள ஜென்மங்களாக இருந்தால்தானே...!

    தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.


    பதிலளிநீக்கு
  3. கோபம் கொப்பளிக்கும் பதிவு
    அருமை
    அறச்சீற்றம் அருமை
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டை மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன். வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. முகநூலில் பகிர்வதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா.

      நீக்கு
  5. மற்ற மாநிலங்களில் மதங்கள் ஒன்றுகொன்று அடித்துகொள்ளும் வேளையில் கூட தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவை திகழ்ந்ததற்கு பெரியார் தான் காரணம். டிசம்பர் 6 நிகழ்வைத்தான் சொல்கிறேன்.
    த ம 6

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    ஆமாம்... தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே...!

    தங்களின் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பக்தர்களின் அசிங்கமான சுயரூபம் வெளியே வருதுபோல இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது...’ சுயரூபம் வெளியே வரட்டும்...

    “ நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்”

    - அவர்தான் பெரியார்...!.
    -நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆற்றொணா அறச் சீற்றத்தோடு ஒரு கவிதை.
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்...!
      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தோழருக்கு வேண்டுகோள் இழிவுப்படுத்தப்பட்ட அந்த புகைப்படத்தினை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக இணையத்தில் வெளியான இப்புகைப்படத்தினை தவிர்ப்பதன் மூலமாக மேலும் எழப்போகும் இழிவுபடுத்துதல் செயலை தவிர்க்கலாம். இதன்மூலம் நேரடியாக கூகுள் தேடுபொறியில் இப்புகைப்படம் வருதலையும் தவிர்க்கலாம். பெரியார் குறித்தான புகைப்படம் தேடும் போதுதான் தங்களின் பதிவு கண்ணில் பட்டதென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள தோழருக்கு,

      தந்தை பெரியாரை இழிவுபடுத்துதல் கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும்கூட. இழிந்தவர்களின் செயலை எடுத்துக்காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாடு அறியும்.

      தந்தை பெரியாரின் தம்பியாக பேரறிஞர் அண்ணாத்துரை இருந்தார்... அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வு...


      சகிப்புத் தன்மை உடையவர்

      “1957இல் அண்ணா காஞ்சியில் போட்டியிட்டபோது காங்கிரசார் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். அண்ணாவின் வீட்டிற்கு வெளியே உள்ள மின் விளக்குக் கம்பத்தில், அண்ணாவின் பிறப்பு பற்றி மிகத் தரக்குறைவாக எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து சி.எஸ். பூஞ்சோலை என்ற தொண்டர் ஆத்திரமுற்று அதை அகற்றச் சென்ற போது, “ஆத்திரப்படவேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ எனக்கு ஒரு காரியம் செய்! பகலில் தான் அந்தத் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய் என்று அண்ணா பணித்ததும் பூஞ்சோலையும் அவ்வாறே செய்ய, மறுநாள் அந்தத் தட்டி அங்கே இல்லை! யார் அதை வைத்தார்களோ அவர்களே அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் அண்ணாவின் சகிப்புத்தன்மையும் விவேகமும் புலனாகின்றன. (ப-97, அண்ணா-100).”


      தங்களின் உள்ளக் கிடக்கு நன்கு தெளிவாகிறது. உண்மைதான் தோழரே! உலகம் அறிந்து கொள்ளட்டும்.

      அண்ணா செய்தது போல பெட்ரோமாக்ஸ் விளக்காக விளங்கட்டும்...!

      தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. தங்களின் கோபம் அனைவருக்கும் உள்ள கோபமே. சிலர் எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.

      நீக்கு
  12. இன்னா செய்தாரை அவர்நாண நன்னயம் செய்துவிடல்
    என்பது தானே மனித தர்மம். எதிரிக்கு கூட இந்நிலை வரவேண்டாமே. பெரியோரை மதித்து நடத்தல் சிறப்பன்றோ.நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      ‘பெரியாரைத் துணைக்கோடல்’ மற்றும் ‘பெரியாரைப் பிழையாமை’ என்று இரண்டு அதிகாரம் வகுத்தளித் -.திருக்கின்றார் அய்யன் வள்ளுவர்.

      ‘ தமிழர்களின் சமயம் வள்ளுவர் சமயமே; அவர்களின் நெறிநூல் திருக்குறளே!’ என்று உரைத்த பெரியாரை மறந்தனரே சிறியர்.

      நன்றி.

      நீக்கு
  13. மிருகத்தினும் கேடான இவர்களுக்கு எல்லா வகையிலும் கேடினை தரும் எந்த அரசியல்வாதியையாவது இப்படி செய்ய துணிவு வருமா ? பெரியார் இயக்கம் அமைதி வழியானது என்று இப்படி செய்கின்றனர். இவர்களுக்கு நேர்மையாக பாடு பட்ட மாமனிதருக்கு இப்படி கேடு செய்ய எப்படி மனம் வந்தது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெடுவான் கேடு நினைப்பான்.
      மிருகமாகிப்போன மனிதன்...
      மனிதனாகிப்போன விலங்கு...!

      -நன்றி.

      நீக்கு
  14. மூடர்கள் செய்யும் செயல் பார்த்தீரா! செய் நன்றி மறந்த மடையர்கள்! சூத்திரராகவே இருப்பேன் என்று அடம்பிடிக்கும் மூடர் கூட்டம். அறியாமல் செய்யும் சிறியார் செயலை பெரியாரே மன்னியுக்கள்.
    என்ன செய்து கிழித்தார் பெரியார் என்று கேட்கும் விவசாயியின் மகன் டாக்டர். மரம் ஏறுபவரின் மகன் கணணி பொறியாளர். முடி திருத்துபவர் மகன் அரசாங்க ஊழியர். இவர்கள் கேள்விகேட்க உரிமையை வங்கி தந்தது பெரியார் என்பது பாவம் இவர்களுக்கு தெரியாது .

    M. செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு

  15. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
    "பாரிசில் பட்டிமன்ற தர்பார் "
    http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
    வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  16. They are misguided. They don't know what they are doing.

    -- Bala Sundara Vinayagam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்ற தங்களின் கருத்து முற்றிலும் உண்மையே...!

      -மிக்க நன்றி.

      நீக்கு
  17. தெரிந்தே இந்த செயலை செய்பவர்கள் நாயினும் கீழானவர்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா...நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா. ...!

      -மிக்க நன்றி.

      நீக்கு
  18. அடிப்பதாலும்
    மூத்திர மழையில் நனைப்பதாலும்
    நமத்துப் போக
    பெரியார் என்ன
    ஊசிப் பட்டாசா

    எத்தனை முறை அடித்தாலும்
    எத்தனை முறை பெய்தாலும்
    அடித்து விட்டுப் போகட்டும்
    பெய்துவிட்டுப் போகட்டும்
    பெரியாரின் கொள்கைகளை
    கருத்துக்களை இவர்களால்
    நமத்துப் போகச் செய்ய இயலாது
    தம +1

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள கரந்தையாருக்கு,

    ஆமாம் அய்யா...
    அவர் என்ன ஊசிப் பட்டாசா...?
    அவர் தமிழனின் நெஞ்சங்களில் மிட்டா மிராசு...!
    அவர் தமிழனை தமிழானாக நிறுத்துப் பார்க்க வைத்த தராசு...!
    அவர்தான் தமிழினித்தின் தந்தை பெரியார்...!

    தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் கோபத்தின் நியாயத்தை அந்த ஐந்தறிவு ஜீவன்கள் அறியா. பொதுச் சேவைக்காரனுக்கு மான அவமானம் கிடையாது என்றவர்தான் என்றாலும் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று கற்பித்தவரும் அவர்தான்.. சூரியனைப் பார்த்து நாய் குரைத்த சிறுவர் கதைதான் நினைவுக்கு வருகிறது நண்பர் ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தந்தை பெரியாரின் கருத்தை வெகு அழகாகச் சொன்னீர்கள். அவர் படாத அவமானாமா,,,? அவர் பார்க்காத வெகுமானாமா?
      தன்மானம் இழ(ழி)ந்த இவர்களை உலகம் பார்க்கட்டும்...!

      -மிக்க நன்றி.

      நீக்கு
  21. அய்யா வணக்கம்.
    முதலிலேயே பார்த்துவிட்டாலும் மிகத்தாமதமாகவே வந்து கருத்திடுகிறேன்.

    கவிதை, வாசிப்பவனின் நெஞ்சில் இனம் புரியாதொரு உணர்வை, திடுக்கிடலை, என்னவோ செய்கிறதே என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தும் என்பதாகக் கொண்டால் இது கவிதை.

    பெரியாரை இல்லாமல் இருந்தால் அந்தச் செருப்பால் அடிக்கும் கைகள் இன்று எங்காவது அடுப்பூதிக் கொண்டிருந்திருக்கும்.

    இவ்வளவு தைரியமாய்ச் சிறுநீர் கழிப்பவர்களின் முகத்தில் அதைக் கழித்துக் குடிக்கவும் சொல்லி இருப்பார்கள்.

    இவர்களை் கையைக் கொண்டு இவர்கள் கண்களையே குத்த வைத்து ரசிப்பவர்களுக்குத் தெரியும் ................
    இதன் முடிவுரை என்ன என்பது.

    ஆடுகள் முட்டிக் கொள்ளட்டும் என

    ஓநாய்கள் காத்திருக்கின்றன.

    மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ள அய்யா,

    ஓ... நாய்கள் காத்திருக்கின்றன...! செம்மறி ஆட்டுக்கூட்டமாகிப் போன மக்கள் என்ற பெயரில் திரியும் மாக்கள்...!
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அய்யா, மனம் வேதனையாக இருக்கிறது, எத்துனை பெரும் சீர்திருத்தவாதி, என்ன காட்டுமிராண்டித் தனம், பாக்கெட் தண்ணிக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும் நாம் எதுவேனாலும் எசய்து விடுவோமா?
    சரி இது எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியாது,
    ஒருமுறை கூட்டத்தில் அவரை செருப்பால் அடித்தார்கள், பொருக்கிகொண்டு, சோடி செருப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த கூட்டத்தில் பார்க்கலாம் என்றவர்,
    இப்பவும் அப்படிதான் சொல்வார்,
    முத்திரத்தையும் சேமியுங்கள் மருந்தாகும் என்பார்.
    எனவே, என்னால் அவர்களை எந்த விலங்கினோடும் ஒப்பிட முடியல, அவை என்மேல் கோபப்படும்,
    சூரியன் மறைக்க முடியாத முட்டாள்கள், விரக்த்தியில் இருப்பவர்கள்,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கு உள்ளக் குமுறலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  24. அய்யோ என் கருத்து எங்கே?????????

    பதிலளிநீக்கு
  25. முட்டா பசங்க! அறிவு கெட்டவங்க....அதனால்தான் இப்படி எல்லாம். இதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தோம் என்றால் நாம் நம்மையும் கீழ்படுத்திக் கொள்வது போலாகும்......இதை எல்லாம் நாம் புறக்கணித்துவிட்டு பெரியாரை நாம் போற்றுவோம் அவரது கொள்கைகளை நாம் வலை அன்பர்கள் பின்பற்றுவோமே.....

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள அய்யா,

    தாங்கள் சொல்வது உண்மைதான். தோழர் செ செந்தழல் சேது மற்றும் திருவாளர். தமிழ் இளங்கோ அவர்களும் தங்களின் கருத்திற்கு ஒரு படி மேலான கருத்தாக இழிவுப்படுத்தப்பட்ட அந்த புகைப்படத்தினை நீக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அவர்களின் கருத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டேன். இருந்தாலும் கூட மேற்படி கண்ட இழிவானவர்களை அம்பலப்படுத்திக் காட்ட வேண்டும்... இவர்களால் பெரியார் என்றும் சிறுமைப்படப் போவதில்லை என்பதுதானே உண்மை.


    தந்தை பெரியாரின் தம்பியாக பேரறிஞர் அண்ணாத்துரை இருந்தார்... அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வு...


    சகிப்புத் தன்மை உடையவர்

    “1957இல் அண்ணா காஞ்சியில் போட்டியிட்டபோது காங்கிரசார் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். அண்ணாவின் வீட்டிற்கு வெளியே உள்ள மின் விளக்குக் கம்பத்தில், அண்ணாவின் பிறப்பு பற்றி மிகத் தரக்குறைவாக எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து சி.எஸ். பூஞ்சோலை என்ற தொண்டர் ஆத்திரமுற்று அதை அகற்றச் சென்ற போது, “ஆத்திரப்படவேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ எனக்கு ஒரு காரியம் செய்! பகலில் தான் அந்தத் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய் என்று அண்ணா பணித்ததும் பூஞ்சோலையும் அவ்வாறே செய்ய, மறுநாள் அந்தத் தட்டி அங்கே இல்லை! யார் அதை வைத்தார்களோ அவர்களே அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் அண்ணாவின் சகிப்புத்தன்மையும் விவேகமும் புலனாகின்றன. (ப-97, அண்ணா-100).”

    தாங்கள் சொல்வதுபோல அவர்களைப் புறக்கணித்தவிட்டு பெரியாரைப் போற்றுவோம்!


    நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...