வெள்ளி, 20 மார்ச், 2015

தடம்மாற்றிய பண்டிகை! - (பரிசு பெற்ற சிறுகதை)

பரிசு பெற்ற சிறுகதை

              திருவாளர்கள் ரூபன் &  யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில்    இடம் பெற்ற 

 எனது சிறுகதை...


தடம்மாற்றிய பண்டிகை!

(மணவை ஜேம்ஸ்)

     ல்லிக்கட்டு நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

     முத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது.  ‘மாடுபிடி வீரன்எனப்பெயரெடுத்தவன்.  இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு  வயதில் கரம் பிடித்தாள்.

     கல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.

     ழவர்திருநாளாம் இன்று தன்வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்குப் பொங்கல் வைத்துப் படைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.  மகாலட்சுமிக்கு முப்பது வயது;  மாநிறத்தில் ஒல்லியாக அழகான உடம்பு முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட!  கருப்பு என்றாலும் ஆணழகனென்றே சொல்லலாம்.
                                         

     பெரியவள்‘ஐஸ்வர்யா ஆறாம்வகுப்பும்;  நடுப்பெண்‘பிரியங்கா அய்ந்தாம்வகுப்பும் சின்னவள்‘அஞ்சலி நான்காம்வகுப்பும் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கிறார்கள்.

“மஞ்சுவிரட்டுக்குப் போகணுமுல்ல!“  முத்தப்பன் வேகப்படுத்தினான்.

“மாடு கன்னுபோடுற நெலமையில் இருக்கு...அத நா பாத்துக்கிறேன்...புள்ளகளக் கூட்டிட்டுப்போயி... காலரியில் நின்னு ஜல்லிக்கட்டப் பாருங்க...”  தயங்கித் தயங்கித்தான் சொன்னாள்.


“அடிப்போடி பொசகெட்ட கழுத... நல்லா இருக்கே கத...இந்தா பாரு மாடுபிடிக்கிறதுக்கு டோக்கனெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்.   நீ வரலன்னா டி.வி.யில நேராக் காட்டுவாங்க... பாத்துக்கிட்டு இரு... புள்ளகளக் கூட்டிட்டுப்போயி பத்தரமா ஒக்காரவைக்கிறேன்... கிளம்புங்கம்மா... பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  புறப்பட்டான்.

மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாகத்தான் இருந்தது. பிள்ளைகளைக் காலரியில் அமரவைத்துவிட்டு, “நா வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு நகரக்கூடாது...!“ கண்டிசன் போட்டுவிட்டுச் சென்றான்.


வந்திருந்த ஆயிரம் காளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தனர். 

முத்தப்பனும் பரிசோதனை முடித்து... சீருடையைப் போட்டுக்கொண்டு வாடிவாசலுக்குமுன் வந்து நின்றான். 

      “ம்ம ஊரு ஜல்லிக்கட்டு ஆரம்பமாவுது... மொதல்ல நம்ம கோயில்மாடு வருது... அத யாரும் பிடிக்கக்கூடாது...”  அறிவிப்புச் செய்யப்பட்டு மாடு அவிழ்க்கப்பட்டது. 
                                      
மாடுகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.  யாருக்கும் பிடிகொடுக்காமல் நிறையமாடுகள் ஓடிக்கொண்டே இருந்தன.  பிடிபட்ட மாடுகள் மிகச்சிலவேமாட்டுக்காரர்களே பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.

“வர்ற மாட்டைப் பிடிக்கிறவனுக்கு பீரோ...கட்டில் பரிசு
தாவி வந்த செவலைமாட்டை, முத்தப்பன் வலதுகையால் லாவகமாகத் திமிலில் கைபோட்டு இடது கையால் கொம்பைப்பிடித்து மாட்டைக்கட்டி... எல்லைக்கோடுவரை சென்றான்.

பரிசை வாங்கிப் பத்திரப்படுத்துவதற்குள் பலமாடுகள் அவிழ்த்துவிடப் பட்டுக்கொண்டே இருந்தன.

 “ய்... அடுத்த மாடு பெரிய மாடுப்பா...பத்துபேரக் கொல பண்ணுனமாடு... ஜாக்கிரத...... ஒரு பவுன் மோதிரம்... மாட்டுக்கரார் ஆயிரம் ரூவா...பிடிங்கப்பா... ஆம்பள சிங்கம்ன்னா பிடிங்கப்பா...“

பிடிகாரரெல்லாம் பயந்து விலக வாடிவாசலருகே முத்தப்பனோடு மூன்று பேர்மட்டுமே அந்த மாட்டைப் பிடிக்க நின்றிருந்தனர்.

“மாடு வாடிவாசலவிட்டு வெளியே வர மாட்டேங்கிதுப்பா... தரையக்குத்துது... ரொம்பக் கோபமாக இருக்கு... ஜாக்கிரத......அறிவிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுதே தாவிக்குதித்து வெளியில் வந்த கருப்புக்காளையின் திமிலைப்பிடிக்க முத்தப்பன் தாவினான்...பிடி சரியாகக் கிடைக்காமல் அவன் கைநழுவ...  மாட்டின் இரண்டுகொம்புகளை வேகமாகப் பற்றினான்... தலையை வேகமாக அந்தமாடு ஆட்ட ஆறடிக்குமேல சென்று கீழே வந்தவனைத் தன்கொம்பிலேயே நடுவயிற்றில் தாங்கி முத்தப்பனின் குடல்சரிய... அவனைச் சுமந்துகொண்டே  அந்தமாடு எல்லைக்கோட்டையும் தாண்டிச்சென்று... அவனைத்தரையில் வீசியது தரையில்விழுந்தவனின் மார்பில் மீண்டும் குத்தியது.  ‘முடிந்தால் என்னைத் தொட்டுப்பாருங்கள்’  என்பதைப்போல அந்தமாடு ஓடாமல் நடந்தே சென்றது.


தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமி ‘அய்யய்யோ...‘வெனக் கத்தியபடி மயங்கி விழுந்தாள். 

பெரியவள்‘ஐஸ்வர்யா செய்வதறியாது அழுதுகொண்டே தன்தங்கைகளை அழைத்தாள்.  நடுப்பெண்‘பிரியங்காஅக்காவைக் இறுகக்கட்டிப்பிடித்துச் சத்தம்போட்டு அழஆரம்பித்தாள்.

“நா வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு

நகரக்கூடாதுன்னு சொன்னாருல்ல... அப்பா... வந்து கூட்டிட்டுப்போவார்“ சின்னவள்‘அஞ்சலிஅசையாமல் நின்றாள். 

மருத்துவர்கள் முத்தப்பனின் உடலைப் பரிசோதித்துப் பார்த்து...
கைவிரித்தனர்!
                                         

     ல்லிக்கட்டு நடந்துகொண்டிருந்தது...!


                                                                     


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in




























19 கருத்துகள்:

  1. கதை தேர்வானமைக்கும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள் அய்யா!
    ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் அவர்களின் முயற்சி நீடு வாழட்டும்.
    நன்றி.

    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவித்தலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துகள் மணவையாரே..

    இது கதையென்றாலும் நடைமுறை வாழ்வில் நடக்கின்ற அவலமே... காலம் மாறும்போது நாமும் மாறிக்கொள்ள வேண்டும் எனச்சொல்லும் சமூகம் இந்த விடயத்தில் மட்டும் ஏன் ?விடாப்பிடியாக இருக்கிறது 80தான் காலத்தின் கோலம்.

    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜி,

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். தங்களின் வாழ்த்திற்கும் & வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    தங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்துவதற்கு பெயர் வீரம் என்பதா ?பாதிக்கப் படுவோரைப் பற்றி அழகாய் படம் பிடித்து காட்டி பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. கதையின் முடிவு சோகமாகத்தான் இருக்கிறது.உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் வெற்றி கொடி நாட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே! கதை அருமையாக இருக்கின்றது.

    தம்பி ரூபன், சகோ யாழ்பாவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இது போன்ற தமிழை வளர்க்கும், எழுத்தை ஊக்குவிக்கும் போட்டிகளை நடத்தி பரிசும் வழங்கும் அவர்களை மனமார வாழ்த்துவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கதை நன்றாக இருந்தது என்று வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஜல்லிக்கட்டின் இன்னொரு பக்கத்தை கதையில் அழுத்தமாக சொல்லி விட்டீர்கள். போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சரியான கதையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை அறியமுடிந்தது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இந்த நவீன யுகத்திலும் தொடரும் ஒரு சமூக அவலத்தை கருவாக கொண்டு, போட்டியில் தேர்வானதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  13. கதையானலும் கண்ணெதிரே கண்டதுபோல் காட்சி! அருமை! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள புலவர் அய்யா,

    தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...