வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வேருக்கு விழுதின் வாழ்த்துகள்!



வேருக்கு விழுதின் வாழ்த்துகள்


ஓர் ஆசிரியனின்-
ஆசிரியர் தின வாழ்த்து...!


ஆசிரிய ஆலவிருட்சத்தின்-
வேருக்கு  நீர்வார்த்த...
நீருக்கு-
என் வாழ்த்துகள்...!

தங்களால்-
தண்நிழல் தரும்
தருவானோம்...!
மாணவ விழுதுகளை வளர்த்து
எருவானோம்...!
குருவான தங்களால்
உருவானோம்...!
பெருமதிப்பிற்குரிய
திருவானோம்...!

ஞானியாய் இருந்து
ஏணியானீர்கள்...!
ஏற்றம் பெற்றோம்...!
பலரால்
போற்றப் பெற்றோம்.

மாணவ விழுதுகளே!
எங்களை ஒடித்துத் துன்புறுத்தினாலும்
பால் தருவோம்...!
உங்களுக்கு அதுஒழுக்கத்தின்
உரமாகும்...!

உள்ளமென்ற இலையைக் கிள்ளினாலும்...
மூடச்சமுதாயத்தின் சளி நீக்கும்
நல்ல கசாயமாவோம்..!
சாதிப்பட்டை  எடுத்தால்...
பாழ்பட்ட
தீண்டாமை இரணத்தி நீக்கி...
உயிரணுக்களாகி  சமூகப் பிணி நீக்குவோம்...

இந்த-
ஆலமரக்கிளைகளில்தான்...
அனைத்து மாணவப்பறவைகளையும்
அணைத்துக் கொள்ளும்
அற்புதம் நடக்கிறது.

இங்கு-
கட்டுப்பாடில்லா பறவைகள்...
மனச்சிறகடித்து வந்து
கட்டுப்பாட்டுடன்
மகிழ்ச்சியாய் தங்கிச் செல்லும்            
வித்தியாசமான வேடந்தாங்கல்!

எந்தப் பறவையிடமும்-
வித்தியாசம் பார்க்காத...
இந்த வேடந்தாங்களில்
ஒரே ஒரு வித்தியாசம்!
மேமாதம் மட்டும்
எந்தப் பறவைகளும்
இங்கு கூடுகட்ட வருவதில்லை...!

ஆசிரிய ஆலவிருட்சத்தின்-
வேருக்கு நீர்வார்த்த...
நீருக்கு விழுதின் வாழ்த்துகள்!

                                                                                              -  மாறாத அன்புடன்,

                                                                                                  மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...