வெள்ளி, 8 மே, 2020

அண்ணாவிற்குத் தம்பியின் தாலாட்டுப் பாடல்


பேரறிஞர் அண்ணாவிற்குத் திருச்சி சிவாவின்  தாலாட்டு





பட்டு மணல் தொட்டிலிலே
பூமணக்கும்  தென்றலிலே
கொட்டும் பனிக்குளிரினிலே
கடல்வெளிக்  கரையினிலே
உறங்குகின்றாய் மன்னா – நாங்கள்
கலங்குகின்றோம் அண்ணா
அருமை அண்ணா

உன்னை இங்குப் பிரிந்ததனால்
பூவுலகம் அழுகின்றது
தன்விழியை இழந்ததனால்
தடுமாறி விழுகின்றது ….                                          (2)
ஏதுமற்ற சூனியத்தில் – எங்கள்
மனம் தவிக்கின்றது
சூழுகின்ற துயர்க்கடலில்
மூழ்கி மூழ்கி துடிக்கின்றது ….                                     (2)
                           ஆரிரோ… ஆரிராரோ ….



கண்ணுறங்கு கலைமகனே
ஆவிவிட்டுப் போனபின்பும்
வாழுகின்ற தலைமகனே
                             ஆரிரோ… ஆரிராரோ ….
நாடுபட்ட நோய் தீர்க்க
நாளெல்லாம் பாடுபட்டாய்
பாடுபட்ட காரணத்தால்
உன் உடம்பில் மாறுபட்டாய்                                       (2)
மாறுபட்ட பொன்னுடம்பை
மீட்டுத்தர முடியவில்லை
ஆனமட்டும் பாடுபட்டும்
அந்த வித்தை பலிக்கவில்லை                                     (2)
                               ஆரிரோ… ஆரிராரோ ….

கண்ணுறங்கு கலைமகனே
ஆவிவிட்டு போன பின்னும் 
வாழுகின்ற தலைமகனே
                                ஆரிரோ… ஆரிராரோ ….
தூங்கிய தென்னவரை
தருணத்தில் விழிக்க வைத்தாய்
தாயைப் போல் அரவணைத்து
தன்மான உணர்வளித்தாய்                                        (2)

விட்டு எம்மைப் பிரிந்து செல்லும்
எண்ணத்தை யார் கொடுத்தார்
சிட்டு போல் சிறகடித்து
சொல்லாமல் ஏன் பறந்தாய்                                       (2)
                               ஆரிரோ… ஆரிராரோ ….

கண்ணுறங்கு தலைமகனே
ஆவி விட்டுப் போன பின்னும்
வாழுகின்ற தலைமகனே
                               ஆரிரோ… ஆரிராரோ ….             (2)


            *************************************


கையறுநிலையில் பேரறிஞர் அண்ணாவின்                
நினைவைப் போற்றும்  
கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்களின் பாடலை... 
தாஜ் நூர் அவர்களின் மெல்லிய இசையில் 


திருச்சி சிவா அவர்கள் உருகிப் பாடித் தாலாட்டும் 
அருமையான பாடல்.    



பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க...



 -மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...