ஞாயிறு, 10 மே, 2020

ஒழிக நீ எம்மண்…!





ஒழிக நீ எம்மண்…!

  

கொரோனா – நீ
வந்துதான் உணர்த்தினாய்…!

மண்டிக்கடையையுடைய பெரியார்-
மக்களிடம்…
மண்டிக்கிடந்த மூடப்பழக்கமொழிய
பகுத்தறிவு மருந்துக்கடை விரித்தார்…
கொள்வாரில்லை!

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
ஆந்திராவிலுள்ள சித்தூர்
திருப்பதி வைணவத்தலமாகட்டும்
கேரளத்தில் பத்தனம் திட்டாவிலுள்ள
சபரிமலை அய்யப்பன்  கோவிலாகட்டும்
தமிழகத்தில் மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலாகட்டும்
இன்னும் உள்ள
அனைத்து கோவில்களில்-
தெய்வங்கள் காப்பதாய்ப்
பூசாரிகள் ஓதுவதும்…

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
இத்தாலி ரோம் நகரிலுள்ள
வாடிகன் புனித பீட்டர் சர்ச் முதல்
தேவாலயங்களில்-
தேவமைந்தன் காப்பதாய்ப்
பாதிரிகள் பாடுவதும்…

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
சவுதி அரேபியாவின்
மக்கா முதல்
மற்றுமுள்ள பள்ளிவாசல்களில்
இறைதூதர் காப்பதாய்
உலமாக்கள் உரைப்பதும் என
இன்னும் எத்தனை எத்தனை?
அத்தனை பேரும்
உண்மைக்குப் புறம்பானவற்றையே
உணர்த்திக் கொண்டிருக்கும்…
உண்மையை உணர்த்தி
அத்தனையும்  இழுத்து மூடச்செய்து விட்டாயே…!

‘ஆட்டம்காலி… படுதாகாலி…’ என்று
கொரோனா – நீ
வந்துதான் உணர்த்தினாய்!

கண்ணுக்குத் தெரியாத
கடவுள் இல்லை என்பதை…
கண்ணுக்குத் தெரியாத – நீ
வந்து உணர்த்தி விட்டாயே…!

உண்மையை உலகினுக்கு
உணர்த்தினாலும்…
நீ வாழ்கயென்று…
வாழ்த்த வழியில்லை…
உண்மையைச் சொல்ல
உனக்கு இத்தனை உயிர்ப்பலிகளா…?!

நாங்கள் வாழ…
ஒழிக நீ எம்மண்…!

 -மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...