வெள்ளி, 2 அக்டோபர், 2015

சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?

சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?


(அக்டோபர் 11, 2015)

பொதுமையில் நம்மைப்பற்றிச்  சிந்திப்போமா?


        









பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது... 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைப்பதிவர் சந்திப்பு நடக்கின்றது.


கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா... 
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா...


என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா...
முத்துநிலவன்  வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட வலைப்பதிவர்  தினம் பாட!


கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -
உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!




பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
புதுக்கோட்டை அன்பர்களின் உழைப்பில்
புதிய வரலாற்றுச் சாதனை படைக்க
வலைப்பதிவர் திருவிழா நடக்கின்றது 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைச்சித்தர் வழிகாட்டும் துணையோடு
வலைப்பதிவர் சந்திப்பு நடக்கின்றது. 




வாருங்கள்...தமிழ் வலைப்பதிவர் எல்லோரும்
வரவேற்க  உள்ளங்கள் காத்திருக்கின்றன...
வருக... வருக... நல்ஆதரவு தருக...!


                                                   












 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

17 கருத்துகள்:

  1. நமக்காக நாம் விடுக்கும் அன்பான அழைப்பு பெற்றேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    தளத்தில் இணைத்து தகவலை உடனே தந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அழைப்பு அருமை அய்யா!
    சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. சந்திப்போம்!

      நீக்கு
  4. அற்புதம் அற்புதம்
    ஒவ்வொரு பதிவரும் விழா அழைப்பிதழைப்
    பதிவிடும் விதம் அதி அற்புதம்
    தங்கள் பதிவு அதில் புதுவிதம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அன்புள்ள ஜி நினைத்ததை முடிப்பவர் தாங்கள் உடனடியாக ஒரு ஸ்பெஷல் பதிவு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அன்பு ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. நலம்தானே? புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      நலம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நலம் பெற்றுள்ளேன். மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆஹா அருமை ஐயா,
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆகா அருமை ஐயா
    அருமை
    புதுகையில் சந்திப்போம்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள கரந்தையாருக்கு,

    தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவி வரிகளுடன் அழைப்பு....விழாவில் சந்திப்போம் மணவை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. விழாவில் அவசியம் சந்திப்போம்.

      நன்றி.

      நீக்கு
  11. ஐயா ! வணக்கம் .தொடர்ந்து எழுதுகின்றீர்கள் .ஒரு காலத்தில் தமிழாசியர்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது என்ற நிலையை மாற்றி, கணினியிலும் நம்மால் ஆதிக்கம் செலுத்தமுடியும் என்பதனைத் தங்களைப் போன்றோரும் ,திண்டுக்கல் தனபாலன் , நண்பர் மா.தமிழ்ப்பரிதி போன்றோரும் செய்து வரும் பணி சிறப்பானது . ஆதிக்கம் செலுத்துவோம் .எல்லாவற்றிலும் ...தமிழ் ஆசியனாய்ய்..என்றும் நட்புடன் தூரிகை கபிலன்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...