புதன், 8 ஆகஸ்ட், 2018

ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!




நெஞ்சம் நிறைந்த தலைவா…! ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!



கலைத்தாய் ஈன்றெடுத்த 
கலைஞரே!
தட்சிணாமூர்த்தி முன்னிலை…
தட்சிணாமூர்த்தி முன் இலையே…!
ஆமாம்… மு. கருணாநிதி என்கிற
தட்சிணாமூர்த்தி முன் இ(ல்)லையே…!
உன் கீர்த்தியை ஒரு –
குவளைக்குள்ளா அடக்க முடியும்?… திருக்
குவளையில் உதயமான சூரியனே…!
குவலயம் முழுக்க அல்லவா
உனது புகழ் பரந்து விரிந்தது!

சுடரொளித் தலைவரே! – உன்
சுடரொளியால்தான் தமிழ்த்தாய்ச்
செம்மொழியாய்ப் புன்னகைக்கிறாள்…! 

அய்யாவின் பகுத்தறிவால்
‘பெரியார் சமத்துவபுரம்’ கண்டாய்…!
அண்ணாவின் பட்டறிவால்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண
அனைவரையும் அர்ச்சகராக ஆக்கினாய்…!

அய்யா துரையின் குருகுல
‘மாணவ நேசனே…!’
‘இளமைப் பலி’ கொடுத்து
‘முரசொலி’த்த முத்துவேலரின்
‘நெஞ்சுக்கு நீதி’யே…! – எங்கள்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவரே!

அஞ்சுகத்தின் அருந்தவப் புதல்வா…
‘பராசக்தி’யைப் படைத்து
திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த
உன்னை ‘மறக்க முடியுமா…?’

‘குறளோவியம்’ வரைந்து
குறளனைத்திற்கும்  உரையெழுதிச்
‘சங்கத் தமிழ்’ தந்தவரே!
குமரிக்கடலில் –
அய்யன் வள்ளுவனுக்கு
133 அடியில் சிலைவைத்த
உலக அதிசயமே!
சென்னையில் வள்ளுவர் கோட்டம் கண்டு
1330 குறளையும் கல்வெட்டாக்கி
வான்புகழ் கொண்ட ஆண்டவனே…!
எங்களை-
அய்ந்துமுறை ஆண்டவனே…!
எங்கள் காலத்தில் வாழ்ந்த வள்ளுவன்…!
என்றும் வள்ளுவனை வாழவைத்த
வள்ளல் பெருமகனும் நீயே…!

‘தொல்காப்பியப் பூங்கா’ வில்
இலக்கணத்தேன் குடிக்க வைத்த
தமிழ்ப்பூவே…! – எங்கள் கோவே…!

‘மானமுள்ள சுயமரியாதைக்காரனே!’
தமிழன் மானமுடன் வாழ
வழிகாட்டிய கைகாட்டியே…!
‘பெண்களுக்குச் சொத்தில் பங்குண்டு’-என்று
பெண்ணினத்தையே பெருமையுடன்
வாழவைத்த பெருமைக்குரியவனே…!

ஊனமுற்றவனை ’மாற்றுத்திறனாளி’ யென்றும்
அரவாணியை ‘திருநங்கை’ யென்றும்
பொட்டில்லா விதவையை
ஒரு பொட்டல்ல  இரண்டாம் பொட்டையும்
‘கைம்பெண்’ யென்றால் வைக்கலாமென்றே
கருணையோடு கண்ணித்தமிழில்
அழைத்து அழகுபார்த்த அற்புதமே!

கலைத்தாய் ஈன்றெடுத்த 
கலைஞரே!
95-ஆம் வயதில்-
உன் சரித்திர சாதனைகளின்
உயரத்தை யாராலும் தொடமுடியாது...!

7- 8 – 2018 அன்று
உயரச் சென்ற இதயசூரியனே…!
தமிழன்னை கண்கள் நெருப்பாய்…
கடலன்னையின் மடியில் பொறுப்பாய்…
அண்ணனின் காலடியில் இருப்பாய்
உனது விருப்பாய் சிறப்பாய் - என
எண்ணிய பொழுது…
ஆளும் அரசு இடம்தர மறுப்பால்
உடன்பிறப்பெல்லாம் துடித்த துடிப்பால்
உதிரமெல்லாம் கொதித்த கொதிப்பால்
ஆழிசூழ் அகிலமும் ஆர்ப்ரித்து அழுதது…!




நீ-
தமிழினம் வாழ
இடஒதுக்கீடு தந்தாயே!
இறந்த பிறகு உனக்கா
அண்ணாவிற்கருகில் இடமில்லை?


கோடான கோடித் தமிழர்களின்
இதய சிம்மாசனத்தில்
இடம் பிடித்த உனக்கா
அண்ணாவிற்கருகில் இடமில்லை?

அண்ணாவின் பெயரைச்சொல்லி…
பெயரளவில் ஆட்சிநடத்தும்
ஆட்சியாளருக்கு வேண்டுமானால்
இதயம் இல்லாமல் இருக்கலாம்…
இதிலொன்றும் ஆச்சரியம் இல்லை…!

உன் தளபதி-
கடமையாற்றக் கண்ணியம் காத்துக்
கட்டுப்பாட்டுடன் பொறுமையும் காத்து
நீதிமன்றம் சென்று பெருமை சேர்த்தார்.

‘தந்தை பெற்ற கடன்
பிள்ளையைச் சேரும்…’
இடைப்பட்ட தடையை உடைத்து
நீ பட்ட கடனைப்
நின் பிள்ளை அடைத்து விட்டார்.

நீதிக்குத் தலைவணங்கும்
கருணையின் நிதியே!
உனக்கு-
நீதியே தலைவணங்கி
நித்திரை கொள்ள
நியாயம் வழங்கியிருக்கிறது.

அண்ணாவின்-
இதயத்தை இரவலாகப் பெற்று
‘நான் வரும்போது உன் காலடியில் வைப்பேன்’ - என்று
வாக்கு கொடுத்தாயே…!
உன் வாக்குப் பொய்க்குமோ…?

ஓய்வில்லாச் சூரியனே!
தமிழினத்திற்காக-
ஓய்வில்லாமல் உழைத்தது போதும்…
தலைவா ஓய்வெடு…!

நீ விட்டுச் சென்ற பணியை
நீ விட்டுச் சென்ற…
உன் தளபதி- இனி
தலைவராய்த் தொய்வின்றித் தொடரட்டும்…!
ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!








                                                 -மாறாத அன்புடன்,












                                                    மணவை ஜேம்ஸ்.



ஞாயிறு, 4 மார்ச், 2018

கலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை!



'பிடர் கொண்ட சிங்கமே பேசு



கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடி வீடியோ வெளியானது அடுத்து தொண்டர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போதும் உடன்பிறப்புகளே என்று அழைப்பார் என்று தொண்டர்கள் காத்துகிடக்கின்றனர். இதனிடையே, கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு உருக்கமான கவிதையை எழுதி அதை அவரிடம் படித்து காட்டியுள்ளார்.


பிடர் கொண்ட சிங்கமே பேசு

 கவிப்பேரரசு வைரமுத்து

இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து

சனி, 3 மார்ச், 2018

‘சிரியா’-வின் அழுகை!



சிரியா போர்






சிரியாபடத்தின் காப்புரிமைREUTERS

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.
ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு படைகள், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.





மேப்

இந்நிலையில், போர்நிறுத்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போராடி வருகிறது.
கிழக்கு கூட்டாவின் நிலை என்ன?
சனிக்கிழமையன்று முக்கிய நகரமான டூமாவில் 17 பேர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த வாரம் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.





குழந்தைகள்படத்தின் காப்புரிமைEPA
Image captionசமீபத்திய தாக்குதல்களில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தாக்குதலுக்கான நேரடி ஈடுபாட்டை ரஷியா மறுத்து வந்தாலும், சிரியா மற்றும் ரஷிய நாட்டு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இக்குழு கூறியுள்ளது.
மேலும், 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
பொதுமக்களை தாக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறுகிறது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நிலை, உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது. கிழக்கு கூட்டாவை "பூமியின் நரகம்" என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார்.

சனி, 24 பிப்ரவரி, 2018

நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.


நினைவலைகளில் நீந்துகிறேன்...!(2)

நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.
பூம்புகார் பார்த்துத் திரைப்பட வசனங்களை உருப்போட்டிருந்த எனக்கு, முதலில் தோன்றியது நான்மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு பேசிப்பார்த்த அந்த வசனத்தைப்போல் நாமும் பலர்முன்னிலையில் பேசிப் பாராட்டு வாங்கிவிடவேண்டும் என்ற ஆசைதான்.

ஆறாம் வகுப்பில் நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறவர்கள் கையைத் தூக்கலாம் என்ற அறிவிப்பிற்கு, தான்முந்துற்ற முதல் கை எனது கையாகத்தான் இருந்தது.
பெயர் எழுதிக் கொண்டார்கள்.
நாடகத்திற்கான கதாபாத்திரங்களை மறுநாள் தெரிவு செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.
அன்றிரவெல்லாம் உறக்கம் வரவில்லை.
எப்பொழுது கண்ணயர்ந்தேனோ தெரியாது.

சனி, 3 பிப்ரவரி, 2018

சூடான முறுக்கு ..வடை… காப்பி….!


நினைவலைகளில் நீந்துகிறேன்...! (1)

மணப்பாறை முறு... முறு... முறுக்கே...! 


    மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் முறுக்கும் தண்ணீர்ப்பஞ்சமும் தாம். ஒரு காலத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தின் விளைவால் மணப்பாறையில் நிற்கும் புகைவண்டிகளின் கழிவறைதோறும் தண்ணீர்பிடித்து அதைக் குடிதண்ணீருக்கும் சமையலுக்கும் பயன்படுத்தக் குடத்துடன் காத்திருந்த பெண்கள் கூட்டத்தை அன்று மணப்பாறை வழியே இரயில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் அறிவர். அரசின் முயற்சியால் இன்று குடிநீர்ப்பஞ்சம் தீர்ந்திருந்தாலும் முறுக்கு இன்றளவும் பிரபலமாக மணப்பாறையின் பெயரைத் தக்கவைத்திருக்கிறது. மணப்பாறையில் தயாரிக்கப்படும்   முறுக்கிற்கு எங்கள் ஊரின் உப்புச்சுவை மிகுந்த நீரும் ஒரு காரணம் என்பது கூடுதல் தகவல்.
   இந்தப் பதிவின் தலைப்பு  அன்றைய திரையரங்குகளில், திரைப்படங்களின் இடைவேளைகளில் இருக்கைகளின் ஊடே நடமாடிய பல  விற்பனையாளர்களின் தொனியை நினைவு கூர்ந்து வைக்கப்பட்டது. 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வெளிவராத படத்தில் ஒரு பாடல்

ஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும்!

 1970 இல் வெளிவந்த சிறுகதை




அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த, கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற காரியத்தில் முனைந்தாள்.

"
என்ன காலிலே?"  என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

"
போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின் தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக் கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை  யாராவது வாங்குவாங்களாங்கோ?" 

Related Posts Plugin for WordPress, Blogger...