திங்கள், 21 நவம்பர், 2016

வருது... வருது... வலைப்பதிவர் திருவிழா!


வலைப்பதிவர் திருவிழா!

                                                                            
                                                                                      

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்க இருக்கின்றது... 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைப்பதிவர் திருவிழா  நடக்க இருக்கின்றது.



கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா... 
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா...


என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா...
முத்துநிலவன்  வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட வலைப்பதிவர்  தினம் பாட!


கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -
உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!


பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
புதுக்கோட்டை அன்பர்களின் உழைப்பில்
புதிய வரலாற்றுச் சாதனை படைத்தும்
வலைப்பதிவர் திருவிழா நடக்க இருக்கின்றது 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைச்சித்தர் வழிகாட்டும் துணையோடு
வலைப்பதிவர் திருவிழா மீண்டும் நடக்க இருக்கின்றது. 



வாருங்கள்...தமிழ் வலைப்பதிவர் எல்லோரும்
வரவேற்க  உள்ளங்கள் காத்திருக்கின்றன...
வருக... வருக... நல்ஆதரவு தருக...!




வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!


20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்
 “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த
ஆலோசனைக் கூட்டம்

---------------------------------------------------------------------------















புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா நடந்து முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு, மாநிலம் தழுவிய விழாவை நடத்த வேறெந்த மாவட்டத்தினரும் --இன்றுவரை-- முன்வரவில்லை.
  
புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர் நிலைமை தர்ம சங்கடமானது.. 
விழாவிற்கு முன்னும் பின்னுமாக நூற்றுக்கணக்கில் விழாப்பற்றிய பதிவுகளை வாரிவழங்கிய பதிவர்களின் அன்பை மறக்கமுடியாது! பாருங்களேன் -http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html

புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் வைகறையை அநியாயமாக இழந்த கொடிய சூழலில், விழாப்பற்றிய சிந்தனை யாருக்கும் எழவில்லை. அதோடு, பொருளாதார ரீதியாகவும் (அவரது குடும்ப நிதியாக ரூ.2.5லட்சத்துக்கு மேலும் அள்ளித் தந்த) நண்பர்களிடமே மீண்டும் பதிவர் திருவிழாவுக்குத் தருக என உடனடியாகக் கையேந்த இயலாத கையறு நிலை!   இந்த ஆண்டு, விழாவே வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுத்திருந்தோம். அதுவும் கடந்து போனது!

இப்போது... இணையத் தமிழ்ப்பயிற்சி கேட்டுப் பலரும் வற்புறுத்தி வரும் சூழலில், பயிற்சியை இந்த ஆண்டு முடிவிலும், வலைப்பதிவர் விழாவை –இப்போதைக்கு மாவட்ட அளவிலான விழாவாக- வரும் ஜனவரி மாதமும் நடத்திவிடலாம் என்று பேசியிருக்கிறோம்.



கடந்தமுறை முயன்று, கடைசியில் வரஇயலாத “தமிழ் இளைஞர்களின் மனம் கவர்ந்த மிகப்பெரிய ஆளுமை” ஒருவர், “அடுத்த விழாவில் உறுதியாகக் கலந்து கொள்கிறேன்” என்று இப்போது கிடைத் உறுதி நம்மைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பிலான பதிவர் திருவிழாவை நடத்திட நெட்டித்தள்ளியது.. 

இதோ ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்
முடிவுகள் வருமாறு –
(அ) இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் ( புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் மூன்றாவது பயிற்சி முகாம்) 
18-12-2016 ஞாயிறு ஒருநாள் பயிற்சி முகாம்.


(1) புதிய வலைப்பக்கம் தொடங்கப் பயிற்சி,
(2) விக்கிப்பீடியாவில் எழுதப் பயிற்சி
(3) யூட்யூபில் (ஒலி-ஒளி) ஏற்றப் பயிற்சி
(4) பிழை திருத்தியைப் பயன்படுத்தப் பயிற்சி 
(5) வழக்கம்போல், திரட்டிகளில் இணைக்கும் பயிற்சி
(6) நூல்களை மின்னூலாக்க உதவி, ஆலோசனைகள்.

நமது ஆஸ்தான வித்துவான்கள் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், தி.ந.முரளிதரன், முனைவர்.மு. பழனியப்பன், விக்கிப் பயிற்சிக்கு என்னாரெசு சாமா, தஞ்சை முனைவர்  ஜம்புலிங்கம் இவர்களுடன், 
உள்ளுர் சித்தர்கள் மது கஸ்தூரிரெங்கன்,  ஸ்ரீமலையப்பன், ராஜ்மோகன், உதயகுமார் முதலானவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்னதாகப் பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.  (அதிக பட்சமாக 75பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யமுடியும் என்பதால் முன்னதாகச் சொல்வது முக்கியம்)
பதிவுசெய்யாமல் கடைசிநேரத்தில் வந்து, 
தாங்களும் சிரமப்பட்டு, எங்களையும் சிரமப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

மதிய உணவை அவரவரே கொண்டுவந்து பகிர்ந்துண்ணலாம். 
(மதிய உணவை வழங்க, இடம்தருவோரையே கேட்டிருக்கிறோம். 
அப்படி அமைந்தால் உணவும் கொண்டுவரத் தேவையில்லை) 
 இருவேளை தேநீர், பயிற்சிக்குக் கட்டணம் ஏதுமில்லை.

பதிவுசெய்ய மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com
தரப்பட வேண்டிய விவரம், 
(1)பெயர், (2)ஆண்/பெண் (3) மின்னஞ்சல், (வலைப்பக்க முகவரி இருந்தாலும் தரலாம்) (4)செல்பேசி எண், (5) இல்ல முகவரி.
(6)தம்மைப் பற்றிய சுருக்கமான விவரம்.
----------------------------------------
பயிற்சி நடக்கும் இடம், மற்ற விவரங்கள் 
விரைவில் மின்னஞ்சல்வழியும். இதே வலைப்பக்கப் பதிவுவழியாகவும் தெரிவிக்கப்படும்.

விவரமறியத் தொடர்புகொள்ள  - 
நா.முத்துநிலவன் -94431 93293  http://valarumkavithai.blogspot.com/
ராசி.பன்னீர் செல்வன் – 9486752525 -  http://rasipanneerselvan.blogspot.in/  
இரா.ஜெயா – 9842179961 - http://jayalakshmiaeo.blogspot.in/
மு.கீதா – 9659247363,  http://velunatchiyar.blogspot.com/
கி.கஸ்தூரிரெங்கன் – 9842528585, http://www.malartharu.org/
மகா.சுந்தர் –9442232678 - http://mahaasundar.blogspot.in/    
மீரா.செல்வக்குமார்- 8870394188 - http://naanselva.blogspot.com/
-------------------------------------------------------------------------------- 
 (ஆ) கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா-2017
 “வலைப்பதிவர் திருவிழா-2017” மாநில அளவிலான ஐந்தாவது விழாவாகவே நடத்திட ஆசைதான்... ஆனால் எமது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் மீண்டும் ஒரு பெரும் செலவை ஏற்கவியலாத சூழலில்... கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவை மாவட்ட அளவில் நடத்த நினைக்கிறோம். (கடந்த ஆண்டு பதிவுசெய்தும் வராதவர்களை மறக்க முடியுமா?) கடந்த ஆண்டு விழா வரவு செலவை பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். இப்போதும் இந்த இணைப்பில் பார்க்கலாம். பார்க்க –

சரி. இனிமேல் உங்கள் ஆலோசனைக்கு எங்கள் கருத்துகள்-
(1)  29-01-2017 ஞாயிறு ஒரு நாள் முழுவதும் பதிவர்விழா...
(2)  முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமை ஏற்பார்கள்.
(3)  தொடக்கவுரை- பிரபல எழுத்தாளர் ஒருவரை அழைக்கலாம்  (சமஸ்?, ஆசை?, மாலன்?, ச.தமிழ்ச்செல்வன்? இவர்களில் வர முடிந்தவரை அழைத்துப் பேசச் சொல்லலாம். யாராயினும்  வலைப்பக்கத் தொடர்புடையவராக இருப்பது முக்கியம்.)
(4)  பரிசுகள், விருதுகளை வழங்கி நிறைவுரை – தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்த பெரும் ஆளுமை ஒருவர் (பின்னர் இவர்களின் உறுதிபெற்றுத் தெரிவிப்போம்)
(5)  தமிழ்வலைப்பக்க எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளைக் கொண்டு, அச்சிட்ட அழகிய மலராக நூலொன்றை வெளியிடலாம்…
(6)  கடந்த விழாவில் மிகப்பெரும் நிதியை வழங்கி உதவிய அமெரிக்கா வாழ் தமிழ்வலைப்பதிவர் திருமிகு விசு அவர்கள் –அங்கிருந்து வந்து செல்ல முடியுமானால்- அவர்களை விழாவில் கௌரவிக்க விரும்புகிறோம். 
(7)  இணையத் தமிழை ஊக்கப்படுத்தும் விதமாக இளைய, மூத்த படைப்பாளிகளுக்குத் தனித்தனியே போட்டிகள் வைத்து, அவர்கள் மகிழும்படி ரொக்கப் பரிசுடன், வலைப்பக்கத்தில் இணைக்கும்படி மின்முத்திரை மற்றும் கேடயப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவது. (த.இ.க. தருமா தெரியவில்லை. எனினும் இணையத் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடைய நல்லோர் உதவ வருவார்கள் என்று நம்புகிறோம்)
(8)  மாநில விழாவாக நடத்த விரும்பினாலும், அது பற்றி மற்ற மாவட்ட மூத்த வலைப்பதிவர்களின் ஆலோசனை பெற்றும், நிதிஉதவி பற்றி உறுதிகள் பெற்றும் பேசி முடிவெடுப்பது.
(9)  பேருதவி செய்வோரை விழாவில் பாராட்டுவதோடு, அவர்தம் வலைப்பக்கத்திற்கு மின்முத்திரை விருதும் வழங்குவது.
(10)  விக்கிப்பீடியா, தமிழ்-மின்னூல் படைப்புகளைப் பாராட்டுவது

இதுபோலும் ஆலோசனைகளை, புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் திறந்த மனத்துடன் எதிர்பார்க்கிறது. லந்துகொள்வோர் அனைவர்க்கும் வழக்கம்போல, பயன்படு பொருள்கள் வழங்கப்படும். 
குறும்பட, நூலறிமுகம், கவிதை-ஓவியக் காட்சிகள்.. 

இன்னும் சிறப்பாகச் செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் பதிவுக்கட்டணம் ஏதும் பெறலாமா?,  என்பது உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும்  தயங்காமல் தெரிவிக்க வேண்டுகிறோம். 

தனி மின்னஞ்சல் தெரிவிக்கப்படும்வரை, 
அனைத்துத் தகவல் தொடர்பு விவரங்களுக்கு -மின்னஞ்சல்  – muthunilavanpdk@gmail.com 

விழா வெற்றிக்கு உதவ விரும்புவோர், இந்தப் பதிவைத் தமது வலைப்பக்கத்தில் பகிர்ந்து, உலகளாவிய நல்ல ஆலோசனைகளைப் பெற உதவ வேண்டுகிறோம். நன்றி

                                                   












 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

மேலும் விவரங்களுக்குக்  கீழே  ‘கிளிக்’  செய்க!

16 கருத்துகள்:

  1. நன்றி அய்யா!
    என்ன இப்படி திரைப்படப் பாடல் துணை(?)யோடு இறங்கிவிட்டீர்கள்! திண்டுக்கல்லார் பாதிப்பா...? எனினும் இணைப்புத் தந்து தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ‘மரம் சும்மா இருந்தாலும்
      காற்று சும்மா இருக்க விடாது...’
      தாங்களும் சும்மா இருக்க மாட்டீர்கள்...!

      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையான வாழ்த்து கவிதை!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாக்கிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. முயற்சி எடுத்து மீண்டும் நடத்த வந்திருக்கும் திரு முத்து நிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. மகிழ்வும் நன்றியும். சகோ.பாடல் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
    2. அன்புள்ள சகோதரி,

      மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான பகிர்வு

    இவ்வாறான நிகழ்வுகள் தொடரவேண்டும்

    வலையுலகில் தமிழ் உலாவ வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் ஆசை நிறைவேற வேண்டும். மிக்க நன்றி.

      நீக்கு
  6. அமர்க்களமாய் ஒரு வரவேற்பு

    வலைப்பூ மீண்டும் களை கட்டட்டும்

    பதிலளிநீக்கு
  7. பாடல் அசத்தல்...

    தகவலை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துப் பாடலோடு வரவேற்பு...
    பதிவர் விழா நல்ல முறையில் நடக்கட்டும்...
    ஆவலாய்...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...